கோவை, அக்.21- சிபிஎம் கோவை வடக்கு நகர மூத்த தோழர் ஆர்.நாச்சிமுத்து அவர்களின் படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் கோவை சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் திங்க ளன்று நடைபெற்றது. கோவை வடக்கு நகரக் குழு சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை வடக்கு நகரக்குழு உறுப்பினரும், பகத்சிங்பு ரம் கட்சி கிளையின் மூத்த தோழருமான ஆர். நாச்சிமுத்து அவர்களின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்ட நிகழ்விற்கு, சிபிஎம் வடக்கு நகரக் குழு உறுப்பினர் எஸ்.நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் படத்தை திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர். முருகேசன், சிபிஎம் மாமன்ற குழுத் தலை வர் வி. இராமமூர்த்தி மற்றும் வடக்கு நகரக் குழுச் செயலாளர் ஆர்.சுந்தரம் ஆகியோர் புக ழஞ்சலி கூட்டத்தில் தோழர் நாச்சிமுத்து அவர்களின் கட்சி பணிகளை நினைவு கூர்ந்த னர். கிளைச் செயலாளர் என். சுரேந்தர் நன்றி கூறினார்.