மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோட்டத்துப்பாளையம் கிளை முன்னாள் செயலாளர் தோழர் ஆர்.கணேசன் படத் திறப்பு நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன் படத்தை திறந்து வைத்தார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தீக்கதிர் கோவை பதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எ.சிகாமணி, இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது உட்பட பலர் பங்கேற்றனர்.