அவிநாசி, மே 13- அவிநாசி பகுதி நடுவச்சேரி கிளையின் மூத்த தோழரான பழனிச்சாமி (வயது 63) வியாழனன்று காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றி யம், நடுவச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த மூத்த தோழர் பழனிச்சாமி. 1990-களில் நடு வச்சேரி பகுதியில் பாத்திர தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்கி, அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை முன் வைத்து போராட்டம் நடத்தியவர். அச்சம யம், நடுவச்சேரி பகுதிகளில் நடை பெற்று வந்த கள்ளச்சாராயம் விற்ப னைக்கு எதிராக பெரும் போராட்டத்தை முன்னேடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளச்சாராய கும்பல் தனது செல்வாக்கை பயன்படுத்தி பழனிசாமியை பொய் புகா ரில் சிக்க வைத்தது. இதையடுத்து காவல் துறையினரால் அவர் கடுமையான சித்தர வதைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் அவரை விடுவிக் கக்கோரி போராட்டங்களை அறிவித்ததை அடுத்து பழனிச்சாமி விடுவிக்கப்பட்டார். இதேபோல், வடுகபாளையம் ஊராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட மைக்க முக்கிய பங்காற்றியதுடன், கட்சி யின் அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பின ராக பணியாற்றியவர். இதேபோல், அவி நாசி சுற்றுவட்டார பகுதிகளில் கோவில்க ளில் பூஜை செய்யும் பூசாரிகளை ஒன்றி ணைத்து அவர்களுக்கு உண்டான உரிமை களை பெற்றுத்தர சிஐடியு பூசாரிகள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து பெரும் பேர ணியை நடத்தினார். இந்த நிலையில் கடந்த சில மாதங்க ளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட் டிருந்த என்சிபி (எ) பழனிச்சாமி வியாழ னன்று இரவு காலமானார் இவரின் இரங்கல் கூட்டம் நடுவச்சேரி பகுதியில் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலை வர் முத்துசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் உண்ணி கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். வெங்கடாசலம், சம்பத், பஞ்சலிங்கம், ஆர்.பழனிச்சாமி, ஒன் றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலா ளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.