தருமபுரி, ஜன.22- தருமபுரி மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட மைத்து, பலப்படுத்திய தோழர் கே.எம்.ஹரிபட் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று அனு சரிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தை கட்ட மைத்தவர் தோழர் கே.எம்.ஹரிபட். ஓசூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்டத்தில் சிஐடியு தொழிற் சங்கத்தை உருவாக்கி, தொழிலா ளர்களின் உரிமைகளை பெற்றுத் தர சமரசமின்றி போராடியவர். உழைப்பாளி மக்களுக்காகவும் தொடர் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட தோழர் கே.எம்.ஹரிபட்-ன் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் அனுசரிக்கப் பட்டது. தருமபுரி, செங்கொடிபுரத் தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மூத்த தோழர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.மாரிமுத்து, எஸ்.கிரைஸா மேரி, வே.விசுவநாதன், ஆர்.மல் லிகா, தி.வ.தனுசன், ஒன்றியச் செய லாளர் என்.கந்தசாமி மற்றும் தீக் கதிர் கோவைப்பதிப்பின் பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், விநி யோகப்பிரிவு மேலாளர் நெல்சன் பாபு உட்பட பலர் கலந்து கொண் டனர். இதேபோன்று, மாமேதை விளா டிமிர் லெனினின் நூற்றாண்டு நினைவு தினம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட ஸ்தாபக தலைவர் தோழர் கே.எம்.ஹரிபட் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தரு மபுரி முத்து இல்லத்தில் சிறப்பு பேர வைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றி யச் செயலாளர் என்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரி முத்து, மாவட்டக்குழு உறுப்பினர் கே.பூபதி, ஒன்றியக்குழு உறுப் பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.