சேலம், டிச.24- தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப் பின் ஸ்தாபக தலைவர் தோழர் து.ஜானகி ராமன் படத்திறப்பு விழா மற்றும் சிறப்பு பேரவை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர் து. ஜானகிராமன் படத்திறப்பு விழா சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சங்கத்தின் கிளை தலைவர் பி.கருப்பண்ணன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் வி.ரகுபதி வர வேற்புரையாற்றினார். தோழர் து.ஜானகி ராமன் படத்தை திறந்து வைத்து சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு என்ற மிகப்பெரிய ஸ்தாபனத்தை உரு வாக்கிய தோழர் து.ஜானகிராமன், மின்சார கம்பிகள் சென்ற இடமெல்லாம் சங்கம் அமைத்த ஒப்பற்ற தலைவர் ஆவார். மின் வாரிய ஊழியர்களின் உரிமைக்காக வாழ் நாள் முழுவதும் பாடுபட்ட ஓய்வறியா போரா ளியாக செயல்பட்டவர் என புகழாரம் சூட்டி னார். இந்நிகழ்ச்சியில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் வி. இளங்கோ, மண்டல செயலாளர் ஜி.ஜோதி மணி, சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதய குமார், மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளை பொருளாளர் கே.பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.