திருப்பூர், செப். 22 – திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப் பினரும், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன் னாள் மாநிலப் பொருளாளருமான தோழர் பி.ராமமூர்த்தியின் 11ஆம் ஆண்டு நினை வஞ்சலி நிகழ்ச்சி எழுச்சியுடன் கடைப் பிடிக்கப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக வெள்ளியன்று காலை நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் தோழர் பி.ராம மூர்த்தி படம் மலர் மாலை அணிவித்து வைக் கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் தலைமை ஏற்றார். இதில் வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர் டி.ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் ஆகியோர் பி.ராமமூர்த்தியின் பணி களை நினைவு கூர்ந்து உரையாற்றினர்.இதைத் தொடர்ந்து பி.ராமமூர்த்தி உருவப் படத்துக்கு நிகழ்வில் பங்கேற்றோர் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். பல்லடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவல கத்தில் நடைபெற்ற தோழர் பி.ராமமூர்த்தி நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், பல்லடம் ஒன்றி யச் செயலாளர் ஆர்.பரமசிவம் மற்றும் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நினைவஞ்சலி செலுத்தினர்.