districts

img

தோழர் அசோக் படுகொலைக்கு கண்டனம்

தோழர் அசோக் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள்ளூரில்  வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஆர்.ஏ.மோகனா, நகர செயலாளர் உதயநிலா  உட்பட பலர் பேசினர்.

 

 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் சாதி வெறி சக்திகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே பகுதி செயலாளர் சு.பால்சாமி தலைமயில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.சுந்தர்ராஜ், சு.லெனின் சுந்தர், நிர்வாகிகள் கோபி, பாக்கியம் பிள்ளை, பிரபு, தீபா, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

அசோக் படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்கே நகர் பகுதி குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் திபா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.