திருப்பூர், பிப்.15- திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற வந்த நடை மேம்பால பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடை பாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. டவுன்ஹால், பதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை தொடர்ந்து புஷ்பா பேருந்து நிறுத்தத்தில் பாதசாரிகள் சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் நிறைவடைந்து வர்ணம் பூசும் பணியை எட்டியுள்ளது.