districts

img

பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புகார் குழு அமைக்க கோரிக்கை

அவிநாசி, மார்ச் 9- அவிநாசி அருகே நடுவச்சேரி அரசுப் பள்ளியில் தோழி  அமைப்பு சார்பில் பள்ளியில் பாலியல் குற்றங்களை தடுக்க  புகார் குழு அமைக்க வலியுறுத்தி புதனன்று கையெழுத்து  இயக்கம் நடைபெற்றது. பெண்கள் பணி செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத் தல்களை தடுக்க, அரசு சார்பில் உள் புகார் குழு அமைக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில்  அனைத்து பள்ளிகளிலும்,  தமிழக அரசு இக்குழுவினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடுவச்சேரி ஊராட்சி உயர் நிலைப் பள்ளியில் தோழி தமிழ்நாடு என்ற அமைப்பின் சார் பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை நடுவச் சேரி ஊராட்சி மன்றத் தலைவர் வரதராஜன் கையெழுத்திட்டு  துவக்கி வைத்தார். மேலும் பாலியல் விழிப்புணர்வு குறித்து  வழக்கறிஞர் மகாலட்சுமி, தன்னார்வ நிறுவன இயக்குனர் பாண்டி செல்வி, ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.