districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அதிக வட்டி தருவதாக பண மோசடி நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார்

சேலம், ஜூன் 14- அதிக வட்டி தருவதாகக்கூறி ரூ.3 கோடி மோசடி செய்த  நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் சேலம் ஆட்சியர் அலுவ லகத்தில் புகாரளித்தனர். சேலம் மாவட்டம், கீரிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். இதன்பின் அவர்கள் செய்தியாளார்களிடம் கூறுகையில், கீரிப்பட்டி பகுதியில் செல்வம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.  இவர் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி ஸ்டோர் என மிகப் பெரிய வணிக வளாகம் கட்டுவதாகவும், அதற்கு பணம்  வழங்கினால் அதிக வட்டி தருவதாகக்கூறி ஒவ்வொரு வரிடமும் 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை 40 பேரிடம் சுமார்  3 கோடி ரூபாய் வரை வாங்கிக்கொண்டு இரண்டு, மூன்று  மாதங்களாக வட்டி மட்டும் கொடுத்து வந்தார். அதன் பிறகு  வட்டியும், அசலும் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இது குறித்து செல்வத்திடம் சென்று கேட்டபோது தந்து விடுகிறேன்  என சொல்லி கொண்டே வந்தார். இந்நிலையில், கடந்த 9  மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து கொண்டு தலை மறைவாகி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மல்லியகரை காவல் நிலையத்தில் புகார்  அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம்  உரிய நடவடிக்கை எடுத்து தலைமறைவான நபரை கண்டு பிடித்து, எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என  வலியு றுத்தி உள்ளனர்.

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை

கோவை, ஜூன் 14- தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 29 பவுன் நகை, பணம்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, சவுரிபாளையம், கருணாநிதி நகரைச் சேர்ந்தவர்  தமிழ்செல்வன் (41). இவர் தனியார் நிறுவன ஊழியர். தமிழ் செல்வன் மற்றும் அவரது மனைவி இருவரும் வேலைக்கு  சென்றுள்ளனர்.  இந்நிலையில், பக்கத்து தெருவில் வசிக்கும் தமிழ் செல்வனின் தாய் ராஜாமணி, மகன் வீட்டுக்கு சென்றார். அப் போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து  அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 29 பவுன் தங்க நகை மற்றும்  ரூ.25 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர் கொள்ளை யடித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக தமிழ்செல்வன், பீளமேடு காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், வழக்குப் பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

சேலம், ஜூன் 14- போலி ஆவணம் தயாரித்து 1.70 ஏக்கர் நிலத்தை அபகரித்து, கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை  எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்  புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே கோண மடுவு குரால் நத்தம் பகுதியை  சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி உள் ளிட்ட உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் மனு அளித்தனர்.  இதுகுறித்து குப்புசாமி கூறுகையில், கோண மடுவு பகுதியில் 1.70 ஏக்கர் நிலத்தில்  கடந்த 40 வருடமாக விவசாயம் செய்து வரு வதாகவும், இந்நிலையில், திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலி யான ஆவணங்களை தயாரித்து நிலத்தை  அபகரித்துக் கொண்டார். இது குறித்து நாக ராஜிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும், அடித்து கொலை மிரட்டல் விடுத் தார். இதனால் விவசாயம் செய்ய முடியாமல்  வாழ முடியாமல் தவித்து வருகின்றோம். நாக ராஜ் என்பவரால் எனக்கும், என் குடும்பத் தாருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இது குறித்து  பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் புகார்  அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித் தார். 

விதிகளைமீறி கட்டப்பட்ட கட்டத்தை இடிக்க உத்தரவு

உதகை, ஜூன் 14- காட்டேரி பகுதியில் விதிகளைமீறி கட்டப் பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவிட் டுள்ளார். நீலகிரி மாவட்டம், மலைப்பிரதேசமாக இருப்பதாலும், சுற்றுச்சூழலை பாதுகாக் கும் நோக்கிலும் மாஸ்டர் பிளான் திட்டம்  அமலில் உள்ளது. அதன்படி, 7 மீட்டர் உயரத் திற்கு மேல் கட்டடம் கட்டக்கூடாது. நீர் நிலைகளையொட்டி கட்டடம் கட்ட அனும தியில்லை. வீட்டிற்கு அனுமதி பெற்று விட்டு,  வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. ஆனால்,  சிலர் விதிகளை மீறி வருகின்றனர். குன்னூர்  அருகே காட்டேரி பகுதியில் 40 வீடுகள்  உள்ளன. இப்பகுதி நிலச்சரிவு ஏற்படக்கூடும்  அபாயகரமான இடமாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கடந்த 40 ஆண்டு களாக வசிக்கும் மக்களை காலி செய்யுமாறு சமீபத்தில் வருவாய்த்துறையினர் நோட்டீஸ்  வழங்கினர். இதற்கிடையே அப்பகுதியில் அனுமதியின்றி 7 மீட்டர் உயரத்துக்கு மேல்  கட்டடம் கட்டப்பட்டு வருவதாக குன்னூர் நக ராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பந் தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, கட்டடம்  கட்டுவதை தடுத்து நிறுத்தினர். இந்நிலை யில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் ஆகியோர் காட்டேரி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள், ஏழை மக்க ளாகிய நாங்கள் வீடு கட்டினால் அனுமதி யில்லை என்று கூறி கட்டடம் இடிக்கப்படு கிறது. ஆனால், வசதி படைத்தவர்கள் விதி களை மீறி கட்டடம் கட்டினால் அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. மழைக்காலம் தொடங்கி விட்டதால், விதிமீறிய கட்டடத் தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது, என்றனர். இதையடுத்து அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடத்திற்கு நகராட்சி மூலம்  எப்படி அனுமதி வழங்கப்பட்டது என அமைச்சர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி னார். இதைத்தொடர்ந்து விதிமீறிய கட்ட டத்தை 2 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் ஏகராஜூக்கு ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவிட்டார்.

வேலம்பாளையம் நடுநிலைப் பள்ளியில்  ரூ.80 லட்சத்தில் 8 ஸ்மார்ட் வகுப்பறைகள்

திருப்பூர், ஜூன் 14 - திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் நடுநிலைப் பள் ளியில் ரூ.80 லட்சம் மதிப்பில் 8 தொடுதிரை (ஸ்மார்ட்)  வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன. திருப்பூர் மாநகராட்சி, 15.வேலம்பாளையம் நடுநிலைப் பள்ளியில், வேலம்பாளையம் அறிவுத் திருக்கோவில் மற்றும்  அட்சயா அறக்கட்டளை சார்பில் புதிதாக 8 புதிய தொடுதிரை  வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், எம்எல்ஏ க.செல்வராஜ், மாநகர மேயர் ந.தினேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவர் உமா  மகேஸ்வரி வெங்கடாசலம், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும்  அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர் கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

உடுமலையில் இன்று மின்தடை 

திருப்பூர், ஜூன் 14 - உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின்  நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று காலை 9  மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட  உள்ளது. எனவே கீழ்க்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக் காது என செயற்பொறியாளர் டி.மூர்த்தி அறிவித்துள்ளார்.  மின் தடை ஏற்படும் பகுதிகள்: பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆா்.வேலூர்,  குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம் பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளை யம்.

50 சத மானியத்துடன் நாட்டுக்கோழி  பண்ணை அமைக்க அழைப்பு

திருப்பூர், ஜூன் 14 – திருப்பூர் மாவட்டத்தில் 50 சதவிகித அரசு மானியத்துடன்  நாட்டுக்கோழி பண்ணை அமைப்பதற்கு ஆர்வமுள்ளவர் களுக்கு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அழைப்பு விடுத் துள்ளார். நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உப கரணங்கள் வாங்கும் செலவு  (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர்  வைக்கும் தட்டு), மற்றும்  4 மாதங்களுக்கு தேவையான தீவன  செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த  செலவில்  50 சதவிகிதம் மானியம் மாநில அரசால் வழங்கப்ப டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4  வார வயதுடைய நாட்டுக் கோழிக்குஞ்சுகள் ஒசூர் மாவட்ட  கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.  பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்த பட்சம்  625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித  குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க  வேண்டும்.  விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்ப டும். ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல் 50 சதவிகிதம் தொகை  அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண் ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி வழங்க வேண் டும். நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் தங்க ளுக்கு அருகாமையிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை  உதவி மருத்துவரை அணுகுமாறு ஆட்சியர் கிறிஸ்துராஜ் கூறி யுள்ளார்.

இரு ஆண்டுகளில் ரூ.310 கோடி காய்கறிகள் விற்பனை திருப்பூர் மாவட்ட ஆறு உழவர் சந்தைகளில் சாதனை

திருப்பூர், ஜூன் 14 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர்  சந்தைகள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுக ளில் ரூ.310 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து  13 ஆயிரத்து 447 மெட்ரிக் டன் அளவு காய்கறி  மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 4 லட்சத்து 55 ஆயிரம் விவசா யிகள் மற்றும் 1 கோடியே 10 லட்சத்து 93 ஆயி ரம் நுகர்வோர் பயனடைந்துள்ளனர் என்றும்  அவர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட் டத்தில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு,  பல்லடம், தாராபுரம், காங்கேயம், உடும லைப்பேட்டை ஆகிய 6 இடங்களில் உழவர்  சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 600 முதல் 645 விவசாயிகள்,  145 முதல் 163 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும்  பழங்களை ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம்  மதிப்பில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொது மக்கள் பயன்பெறுகின்றனர். திருப்பூர் மாவட் டத்தில் 6 உழவர் சந்தைகளில் மொத்தம் 2,854  எண்ணிகையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 485 விவசாயிக ளின் பழைய அட்டைகளை புதுபிக்க ஆவ ணங்கள் பெறப்பட்டு கள ஆய்வுப்பணி கள் நடைபெற்று வருகிறது. 939 பழைய  அட்டைகளின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் புதன்கி ழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருக்கிறார்.

பாரதிபுரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

திருப்பூர், ஜூன் 14 - இடுவாய் ஊராட்சி, பாரதிபுரம் சமுதாய நலக்கூடத்தில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடத்திய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புமுறை நுகர்வோர் உரிமை கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்பு ணர்வு முகாமில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், கூடுதல் சார்பு நீதிபதி எம்.மேகலா மைதிலி தலைமையில் வழக்கறிஞர்கள் சி.பி.சுப்பிரமணியம், கே.கணபதி மற்றும்  சி.எம்.அருணாசலம் ஆகியோர் விழிப்புணர்வு உரை ஆற்றி னர். முன்னதாக இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே. கணேசன் வரவேற்றார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  ஊராட்சித் துணைத் தலைவர் எஸ்.பரமசிவம் நன்றி கூறினார். முன்னதாக பாரதிபுரம் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட் டன.

நிரம்பி வழியும் கழிவுநீர்: கண்டுகொள்ளாத நகராட்சி

சேலம், ஜூன் 14- எடப்பாடி நகராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் சாலையில் செல்வதை நகராட்சி அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆவணியூர் பேருந்து நிலையம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக தூய்மை பணி மேற்கொள்ளாததால், கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் கால்வாயில் தேங்கி உள்ளதால், கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கழிவுநீர் சாலையில் செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூய்மை பணி மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

தவறாக கணக்கீடு: மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு

தருமபுரி, ஜூன் 14- பாப்பாரப்பட்டி அருகே தவறாக மின் கணக்கீடு செய்ததாக புகார் தெரி வித்து அப்பகுதி பொதுமக்கள் மின்வா ரிய அலுவலகத்தை பூட்டு போட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேப்பிலைஅள்ளி, பனைகுளம் ஊராட்சிக்குட்பட்ட 5 கிரா மங்களில் வீட்டு மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.18,700 வரை மின்கட் டணம் கணக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இது குறித்து புகார் தெரிவிக்க பாப்பாரப் பட்டியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத் திற்கு திரண்டு வந்தனர். இதையடுத்து ஆவேசமடைந்த பொதுமக்கள், மின் வாரிய அலுவலகத்துக்கு பூட்டு போட் டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இளநிலை பொறியா ளர் செந்தில்குமாரிடம், கூடுதல் மின்கட் டணம் கணக்கீடு செய்யப்பட்டது குறித்து கிராம மக்கள் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து எழுத்துப் பூர்வ புகார் தெரிவித்தால் மேல் அதிகாரி களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் புகார் மனு எழுதி கொடுத் ததுடன், பூட்டிய அலுவலகத்தை திறந்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்ற னர்.

சேலத்தில் ஜப்பான் குழு ஆய்வு

சேலம், ஜூன் 14- சேலத்தில் நடைபெற்று வரும் புறநகர் அரசு மருத்துவ மனை கட்டட பணிக்கு, நிதி ஒதுக்கீடு செய்த ஜப்பான் நிதியு தவி குழுவினர் நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் ரூ.28 கோடி மதிப்பீட்டில் சேலம் புறநகர் மருத்துவமனை கட்டுமான பணி கள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனை கட்டடம் 55 ஆயிரத்து 466 சதுரஅடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பான் நிதியுதவி குழுவின் இந்திய தலை வர் அதிதி மற்றும் ஆலோசகர் மோகா ஆகியோர் தலைமையி லான குழுவினர், செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டனர். கட்டடப்பணி நடைபெறும் ஒவ்வொரு வளாகங்களாக சென்று, பணி எந்த அளவிற்கு நடைபெற்று உள்ளது? எப்பொ ழுது பணிகள் முடிக்க பெறும் உள்ளிட்டவைகளை உரிய அதிகாரியிடம் கேட்டறிந்தனர். இவர்களுடன் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார அதிகாரிகள் குழுவினரும் வந்திருந்தனர். இரண்டு வளாகங்களாக உள்ள புறநகர் அரசு மருத்துவமனை யில் உள்ள அனைத்து பணியாளர்களையும் அழைத்து அதி காரிகள் குழுவினர் நலம் விசாரித்தனர். இந்த மருத்துவமனையில் 90 படுக்கை வசதிகள் ஏற்பாடு  செய்யப்படவுள்ளது. மேலும், இந்த மருத்துவமனையில் அதி நவீன சிகிச்சை கருவிகள், டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் ஒரே  நேரத்தில் மூன்று நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் வகையில் மருத்துவமனை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வருகை தரும் போது சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான வாழப்பாடி, அயோத்தியபட்டணம், காரிப்பட்டி, ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் பயனடைவார் கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவாணி அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு

கோவை, ஜூன் 14- கோவை மாநகரில் 26 வார்டுகள், 20க்கும் மேற்பட்ட நகரை யொட்டி உள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. இதற்கிடையே வெயிலின் தாக் கம் அதிகரித்து வந்ததால், கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதி யில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கி யது. இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது மற்றும் கடந்த இரண்டு நாட்களாக சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 15 முதல் 20 மில்லி மீட்டர் வரை மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு செல்லும் முக்தி ஆறு, பட்டியலாறு போன்ற பகுதி களில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறு கையில், சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. தற்போது கேரளத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால், அணையின் நீர்மட்டம் உயரத்தொடங் கியுள்ளது. வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்து, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தால், குடிநீருக் காக ஈடுபடும் நீரின் அளவு அதிகரிக்கப்படும், என்றார்.