தருமபுரி, ஜூலை 31- காரிமங்கலம் அருகே சிறுபான்மை சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தி, ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், நாகனம்பட்டி ஊராட்சி, சங்கனம்பட்டி கிராமத்தில் ஒரு சமூகத்தினர் அதிக மாகவும், சிறுபான்மையினர் சுமார் 30 வீடுகளில் வசித்து வரு கின்றனர். இந்த கிராமத்தில் ஜூலை 23 ஆம் தேதியன்று மாடு பிடி திருவிழா நடைபெற்றது. அப்போது அங்கு மாடு பிடிக்க சென்ற சிறுபான்மை மக்களை திருவிழாவில் கலந்து கொள் ளக்கூடாது; மாடு பிடிக்கக்கூடாது எனக்கூறி பெரும்பான்மை சமூகத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த இருவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளி யாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காரி மங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சிறுபான்மை மக்களாகிய சிலரை, பெரும்பான்மை சமூகத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, எங்களை தாக்கிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.