கோவை, ஜூன் 5- புறம்போக்கு இடத்தை அபகரிக் கும் நோக்கத்தில், அப்பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு தொல்லை அளித்து வரும் பாஜக நிர் வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி கோவை ஆட்சி யரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம், மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் புகார் மனு ஒன்றை அளித்த னர். அம்மனுவில், மேற்கண்ட பகு தியில் உள்ள புறம்போக்கு இடத்தில் திருநங்கைகள் 6 பேர் வசித்து வருகின் றோம். அவ்விடத்தில் நாங்கள் கால் நடைகளை வளர்த்தும், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களை விற்று வாழ்க்கை நடத்தி வருகின்றோம். இந்நிலையில், பாஜக நிர்வாகிகளான மனோன்மணி, பாபு உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும் பல், நாங்கள் வசித்து வரும் புறம் போக்கு இடத்தை அபகரிக்கும் செய லில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களது வீட்டை சேதப்படுத்தியும், கால்நடை களை அவிழ்த்தும் விடுகின்றனர். இரவு 10 மணிக்கு மேல் எங்களது வீட்டில் பாஜகவின் சுவரொட்டிகளை ஒட்டு வதும், பாலியல் தொல்லையும் அளித் தும் வருகின்றனர். இந்நிலையில், நாங் கள் வசிக்கும் இடத்தை காலி செய்யா விட்டால், எரிபொருளை ஊற்றி உயிரு டன் கொளுத்தி விடுவோம் என தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, நாங்கள் வசித்து வரும் புறம்போக்கு இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும். மேலும், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் பாஜக நிர்வாகிகளின் மீது உரிய நடவ டிக்கை எடுத்து, எங்களுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும் என மனு அளித் தனர்.