districts

img

சேலம் மாவட்ட மைய நூலகத்தில் அடிப்படை வசதியில்லை

சேலம், ஜூன் 21- சேலம் மாவட்ட மைய நூலகத் தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலி யுறுத்தி போட்டி தேர்வர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் (யுபிஎஸ்சி), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) உள் ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு மாண வர்கள் படித்து வருகின்றனர். தின மும் நூற்றுக்கணக்கான மாணவர் கள் போட்டி தேர்வுக்கு படித்து வரும் நிலையில், நூலகத்தில் குடிநீர், கழிப் பறை வசதி உள்ளிட்ட போதிய அடிப் படை வசதிகள் இல்லை எனக்கூறி போட்டி தேர்வர்கள் திடீரென செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து போட்டி தேர்வர்கள் கூறுகையில், சேலம் மாவட்ட மைய நூலகத்தில் நாளொன்றுக்கு 300 பேர்  வரை போட்டி தேர்வுக்கு படித்து வரு கின்றனர். அதேபோல நூலகத்திற்கு புத்தகம் படிக்க 200 பேருக்கு மேல் வருகின்றனர். ஆனால் இங்கு 4 கழிப் பறைகள் மட்டுமே உள்ளன. குடிநீர் வசதி, கழிப்பறை, அமரும் வசதி, மின் விளக்கு வசதி உள்ளிட்ட அடிப் படை வசதிகள் போதிய அளவுக்கு இல்லாமல் உள்ளது. இதுதவிர போட்டி தேர்வுக்கு தயாராகி வரும்  மாணவர்களுக்கு உரிய புத்ததகங் கள் இல்லை. பழைய புத்தகங்கள் மட்டுமே உள்ளன. போட்டி தேர்வுக் கான, புதிய புத்தகங்களை வாங்கி தர வேண்டும். சேலம் மாவட்ட மைய  நூலகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதைய டுத்து மாவட்ட மைய நூலகத்தின் முதுநிலை நூலகர் சக்திவேல், போட்டி தேர்வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதைய டுத்து, போட்டி தேர்வர்கள் ஆர்ப்பாட் டத்தைக் கைவிட்டு கலைந்து சென்ற னர். இதுதொடர்பாக, மாவட்ட மைய நூலக அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று போட்டி தேர்வர்களுக்கு உரிய வகையில் குடி நீர் வசதி செய்து தரப்படும். கழிப் பறை வசதி உள்ளிட்ட உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த பள் ளிக்கல்வித்துறை அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரி வித்தனர்.