districts

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதை கண்காணிக்க ஆணையம்

நாமக்கல், ஜூன் 10- நாமக்கல் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டி களை சுத்தம் செய்வதை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மனிதர் களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.உமா எச்ச ரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் சாக்கடைகள் மற்றும் கசடு  கழிவுநீர் தொட்டிகள் மேலாண்மை தொடர் பான அபாயகரமானவற்றை நீக்குதலை கண்காணிக்க, ஆட்சியர் எஸ்.உமா தலை மையில் துப்புரவு ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் நகராட்சி ஆணை யாளர்கள், தீயணைப்பு அலுவலர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், தாட்கோ மேலாளர், சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகி யோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் ஆணை யத்தின் தலைவரும், ஆட்சியருமான உமா  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் உமா பேசுகை யில், கசடு மற்றும் கழிவு நீர் தொட்டிகளை  சுத்தம் செய்யும் பணிக்கு, இயந்திரங்களை  மட்டும் பயன்படுத்த வேண்டும்.

மனிதர் களை உள்ளே இறக்கி சுத்தம் செய்வது முற்றி லுமாக தடை செய்யப்பட்டுள்ளது. கசடு கழிவு நீர் அகற்றும் பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பயிற்சி பெற்ற பணி யாளர்களையே ஈடுபடுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் உரிமை யாளர்கள் மற்றும் பொதுமக்கள், மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. இயந்திரங்கள் மூல மாக செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய வேண்டும்  என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனிதக்கழிவுகளை அகற்றும் தொழில்  புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறு வாழ்வு சட்டப்படி, மனிதர்களை கொண்டு கைகளால் கழிவுகளை அகற்றுவது முற் றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் கீழ் மீறப்படும் குற்றங்களுக்கு,  ஜாமீனில் வர அனுமதி கிடையாது. நேரடியா கவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வொரு நபரையும், அபாயகரமான முறையில் கழிவுநீர் அல்லது கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தக்கூடாது. இதை முதல் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். 2 ஆவது  முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக் கப்படும், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.