திருப்பூர், ஏப்.16 - திருப்பூர் ரயில் நிலைய சரக்கு பார்சல் பிரிவில் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் முறையான ஆவ ணங்கள் இன்றி பிற மாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூடை பனியன் ஆடைகள் பறி முதல் செய்யப்பட்டன. திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பனியன் ஆடைகள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தில்லி என இந்தி யாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. பிற மாநிலங் களுக்கு பொருட்களை அனுப்ப ரயில் மூலம் அனுப்பினால் சரக்கு கட்டணம் குறைவு மற்றும் நேரம் சேமிக்கப்படும் என்பதால் ஏராளமானோர் ரயில் மூலம் பொருட்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரில் இருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு முறை யான ஜி.எஸ்.டி பதிவு செய்யாமலும், உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக கொண்டு செல்லப்படுவதாக ஈரோடு வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, திருப்பூர் ரயில் நிலைய சரக்கு பார்சல் பிரிவில் வணிகவரித் துறை 5 பேர் கொண்ட பறக்கும் படை குழு வினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பில் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இன்றி பிற மாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூடை பனியன் ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மூடைகளை ஈரோடு வணிகவரி துறை அலு வலகத்திற்கு எடுத்துச் சென்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வணிக வரித் துறை அலுவலர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் திடீரென பார்சல் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் ரயில் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.