districts

img

பணி ஓய்வு பாராட்டு விழா

தருமபுரி, மே 26- நல்லம்பள்ளியில் பணி ஓய்வு பெற்ற  சத்துணவு ஊழி யர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா நடை பெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின்  நல்லம்பள்ளி  ஒன்றிய தலைவர் ஆர்.மதலைமுத்து, துணை தலைவர் ஏ. செல்வி, செயற்குழு உறுப்பினர் வி.தங்கவேல் ஆகியோர்  சத்துணவு அமைப்பாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.  இதையடுத்து, அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலை வர் சி.காவேரி  தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏசேகர், பொருளா ளர் கே.புகழேந்தி,  சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் பெ.மகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் பி.வளர் மதி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.