ஈரோடு, மார்ச் 19- பள்ளிப்பாளையம் வேலுச்சாமி மற்றும் கோகுல்ராஜ் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் திறம்பட வாதாடி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தந்து நீதியை நிலைநாட்டிய வழக்கறி ஞர்களுக்கு ஈரோட்டில் பாராட்டு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் கந்துவட்டி கும்பல் இளம்பெண்ணின் வாழ்வை சூறை யாடியதை எதிர்த்து போராடியதற் காக, அக்கும்பலால் படுகொலை செய்யப்பட்டவர் மார்க்சிஸ்ட் கட்சி யின் கிளை செயலாளர் வேலுச் சாமி. இவரின் படுகொலை வழக் கில் அரசின் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகி திறம்பட வாதிட்டு குற்ற வாளிகளுக்கு உரிய தண்ட னையை பெற்றுத்தந்தவர் வழக்க றிஞர் பி.திருமலைராஜன். இதே போல், பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் சாதி ஆணவப்படு கொலை வழக்கில் பல ஆண்டு கள் சட்டப் போராட்டம் நடத்தி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்று தந்தவர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன். இவர்கள் இருவ ருக்கும் பாராட்டு விழா வெள்ளி யன்று ஈரோட்டிலுள்ள இந்திய கம் யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சி கள், ஜனநாயக அமைப்புகள் சார் பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார். திராவிடர் விடுதலை கழக மாநில அமைப்புச் செயலர் ப.ரத்தினசாமி வரவேற் றார். மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன், திராவிடர் விடுதலைக் கழ கத்தின் தலைவர் கொளத்தூர் மணி, ஆதித்தமிழர் பேரவையின் தலை வர் இரா.அதியமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், நீரோடை அமைப்பின் தலைவர் நிலவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில நிர்வாகி வி.பி.குண சேகரன், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னை யன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத்தின் தலைவர் மதிவண்ணன் ஆகியோர் பங்கேற்று மூத்த வழக்கறிஞர்களை பாராட்டி கௌரவித்தனர். இந் நிகழ்வில் அரசியல் கட்சிகள், முற் போக்கு, ஜனநாயக அமைப்புக ளின் நிர்வாகிகள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.