தருமபுரி, ஆக.26- கோம்பேரி கணவாய் சாலை அமைக்கும் பணியை உடனடியாக துவங்க வேண்டும் என விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில், விவ சாயிகள் சங்கத்தினர், விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்து பேசினர். இதில், தருமபுரி மாவட்டத்தில் சராசரி அளவைவிட தற்போது மழை குறைவான அளவில் பெய்துள்ளது. இத னால், பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்துள்ள சிறுதானிய பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவே, தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறி விக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண் டும். பாரம்பரிய நெல் ரகங்களுக்கான விதைகளை குறித்த பருவகாலத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கூட்டு பட்டாக்களை தனி பட்டாக்களாக மாற்றி வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர் பாசன திட்டங் களை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.பிரியா, வேளாண்மை இணை இயக்குநர் க. விஜயா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சாமிநாதன் உட்பட தொடர்புடைய அலுவ லர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.