சேலம், டிச.17- இந்திய விடுதலை போராட்ட வீரரும், இந்திய பொது வுடைமை இயக்கத்தில் மாபெரும் தலைவருமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம் சனியன்று அனுசரிக்கப் பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பொது வுடைமை இயக்கத்தின் மாபெரும் தலைவரும், இந்திய தொழிலாளி வர்க்கத்திற்காக களமாடியவர் தோழர் பி.ராம மூர்த்தி. சிறையில் இருந்து கொண்டே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். சென்னை மாகானத்தின் முதல் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்ட பி.ராமமூர்த்தி, சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார். மொழிவாரியான மாநிலத்திற்கு முதலில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த தோழர் பி.ராமமூர்த்தியின் நினைவுதினம் சனியன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரக்குழு சார்பில், சிறை தியாகிகள் நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். மேட்டூர் சின்ன பார்க் அருகே உள்ள கட்டுமான சங்க அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் வீ.இளங்கோ, கட்டுமான சங்க மாவட்டச் செயலா ளர் செ.கருப்பண்ணன், மின்வாரிய சங்கத் தலைவர் பி.கே.சிவக்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் து.சிங்கராயன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். மேச்சேரியில் படத்திறப்பு மார்க்சிஸ்ட் கட்சியின் கோல்காரனூர் ஒன்றிய அலு வலகத்தில், தோழர் பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா ஆகி யோரின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நி கழ்ச்சிக்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.மணிமுத்து தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர். நங்கவள்ளி அருகே உள்ள பனங்காட்டூர் சிபிஎம் பெண்கள் கிளை சார்பில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா ளர் கே.ராஜாத்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.