districts

img

தோழர் தேவ.பேரின்பன் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்

பென்னாகரம், செப்.17- மார்க்சிய அறிஞர் தோழர் தேவ. பேரின்பனின் 10 ஆம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி, பாப்பாரப்பட்டி பகுதியிலுள்ள அவரது நினைவிடத் தில் ஞாயிறன்று நடைபெற்றது. மார்க்சிய அறிஞர் தோழர் தேவ. பேரின்பனின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் அவரது நினைவிடம் அமைந் துள்ள தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டி அருகே உள்ள கரடிகுண்டு கிராமத்தில் ஞாயிறன்று அனுசரிக் கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப் பாரப்பட்டி பகுதி செயலாளர் ஆர். சின்னசாமி தலைமை வகித்தார்.  இதில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் ரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, வி. மாதன், வி.விஸ்வநாதன், ஆர்.மல் லிகா, பென்னாகரம் பகுதி செயலா ளர் ஜி.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சின்னசாமி, கே.அன்பு, ஆ.ஜீவானந்தம், மல்லை யன், எஸ்.செல்லன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட் டச் செயலாளர் சின்ன கண்ணன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர். முன்னதாக, தோழர் தேவ. பேரின் பனின் நினைவுதினத்தை முன்னிட்டு, ரத்ததானம் வழங்கிய இந்திய ஜன நாயக வாலிபர் சங்க தலைவர்க ளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட் டன.