districts

img

பவானியாற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர்கள்

மேட்டுப்பாளைம், அக்.30- மேட்டுப்பாளையம் பவானியாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூன்று கல்லூரி மாணவர்களை தீய ணைப்பு படையினர் பரிசல்கள் உதவி யோடு தேடும் பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். கோவையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் கோவையைச் சேர்ந்த  சுரேந்திரன், ராஜதுரை, சென்னை யைச் சேர்ந்த கனீஷ்க் ஆகியோர் எம்பிஏ படித்து வருகின்றனர். இம் மாணவர்கள் தங்களுடன் கல்லூரி யில் பயிலும் சக மாணவர்கள் ஏழு பேருடன் இணைந்து மொத்தம் பத்து பேர் விடுமுறை தினமான ஞாயிறன்று மேட்டுப்பாளையம் வந்துள்ளனர். இதன்பின் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மாம்பட்டி என்னுமிடத் திற்கு சென்ற மாணவர்கள் அனை வரும் அங்கிருந்த பவானியாற்றில் இறங்கி குளித்ததோடு ஆற்றின் மறு கரைக்கும் செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது ஆற்றின் வேகம் திடீரென அதிகரிக்கவே சுரேந்திரன், ராஜ துரை, கனீஷ்க் ஆகியோர் வெள்ளத் தில் அடித்து செல்லப்பட்டனர். உடன் வந்த மாணவர்களின் கூக்குரலை கேட்ட மாம்பட்டி கிராமத்தினர் இது குறித்து மேட்டுப்பாளையம் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் பரிசல்கள் உதவி யோடு மாணவர்களை தேடும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றின் ஆழமான பகுதிகளில் கயிறுகளில் இரும்பு கொக்கிகளை வீசியும் தேடி வருகின்றனர். இதனிடையே ஆற் றின் மறுகரையில் சிக்கி கொண்ட மீத முள்ள ஏழு மாணவர்கள் பரிசல்கள் மூலம் பத்திரமாக இக்கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.