districts

img

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், செப். 2 - திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பஞ்சலிங்க அருவி கூட்டுப்பண்ணைய உழ வர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வெள்ளிக் கிழமை வருகை தந்து நிறுவனத்தின் செயல் பாடுகளைப் பார்வையிட்டார்.  பஞ்சலிங்க அருவி கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பற்றி அதன் தலைவர் உடுக்கம்பாளையம் சு.பரம சிவம் ஆட்சியரிடம் விவரித்துக் கூறினார். நிறு வன இயக்குநர்கள் முத்துச்சாமி, செல்வக்கு மார் மற்றும் நிர்வாகி கீர்த்திகா ஆகியோர் உட னிருந்தனர்.  மேலும், இந்நிறுவனத்திற்கு, உறுப்பினர் களுக்கு வேளாண்மையோடு தொடர்புடைய  அரசு துறைகளின் திட்டங்கள் மற்றும் மானிய  உதவி திட்டங்களில் முன்னுரிமை வழங்க  வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தின்  திட்டங்களை இந்நிறுவனத்தின் மூலம் மூலம் செயல்படுத்தினால், உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் உள் ளிட்ட திருப்பூர் மாவட்ட அளவிலான தென்னை விவசாயிகள் பயனடைவர். மேலும் இந்நிறுவனத்திற்கு ஒன்றிய அரசிடம்  இருந்து வரவேண்டிய பங்கு மானியத்தைப் பெற்றுத்தர மாநில அரசின் மூலம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட  ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட் டது.  இந்த நிகழ்வில் வேளாண் வணிகம் மற் றும் விற்பனை, வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண்மைப் பொறியியல், உள் ளாட்சி உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை களைச் சேர்ந்த மாவட்ட அளவிலான அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.