districts

img

மாவட்ட மைய நூலகத்தில் ஆட்சியர் ஆய்வு

சேலம், செப்.29- மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு மேற் கொண்ட சேலம் ஆட்சியர், அடிப்படை வசதி கள் குறித்து கேட்டறிந்தார். சேலம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும்  மாணவ, மாணவியர்களுக்கென மேற் கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி சனி யன்று ஆய்வு செய்தார். அப்போது அவர்  பேசுகையில், சேலம் மாவட்ட மைய நூல கத்தினை மேலும் நவீன மயமாக்கிடும் வகையில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் கட்டட மராமத்து பணி கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர் வர்களுக்கான பல்வேறு வசதிகள், நூலகம்  மறுசீரமைப்பு பணிகள் உள்ளிட்ட நூலக மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டத்தில், ஒரு  மாவட்ட மைய நூலகம், 49 கிளை நூலகங் கள், 78 ஊர்ப்புற நூலகங்கள், 41 பகுதி நேர  நூலகங்கள், 16 முழு நேர கிளை நூலகங் கள் மற்றும் ஒரு நடமாடும் நூலகம் என மொத் தம் 186 நூலகங்கள் செயல்பட்டு வரு கின்றன. மாவட்ட மைய நூலகத்தில் போட்டி  தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ,  மாணவியர்களுக்கான 1.94 லட்சம் புத்தகங் கள் உள்ளன. தினசரி சுமார் 250க்கும் மேற் பட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும்  மாணவ, மாணவியர்களும், அதேபோல் தின சரி 150க்கும் மேற்பட்ட வாசகர்களும் மாவட்ட  மைய நூலகத்திற்கு வருகை தந்து பயன டைந்து வருவதால் அவர்களுக்கான குடிநீர், கழிப்பிட வசதி, காற்றோட்ட வசதிகள் உள் ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக  மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது, என்றார் இந்த ஆய்வின் போது  மாவட்ட நூலகர் டி.விஜயகுமார், சேலம் வரு வாய் வட்டாட்சியர் தாமோதரன் உட்பட அரசு  அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.