districts

img

பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

தருமபுரி, ஜன.24- சிறப்பாக செயலாற்றிய பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பாராட்டு தெரிவித்தார். தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு தலை வர்கள் மாநாடு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி பேசு கையில், அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத் துவதற்கும், மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த கல்வி அளிப் பதை உறுதி செய்வதற்கும் பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இத்தகையை குழுவில் உள்ள அனை வரும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணை யாக இருந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும், என தெரிவித் தார். இதைத்தொடர்ந்து சிறப்பாக சேவையாற்றிய பள்ளி  மேலாண்மைக்குழு தலைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் களையும், கேடயங்களையும் ஆட்சியர் கி.சாந்தி வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா, பள்ளி மேலாண்மைக்குழு மாநில கருத்தா ளர் மரியசூசை, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள் மற் றும் உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.