திருப்பூர், மே 17 – திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் பணியிட மாற்றம் செய்யப்படு வதாக தமிழக அரசு செவ்வாயன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் மே 18 வியாழனன்று நான்கு கல் குவாரி களுக்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட் டம் கோடங்கிபாளையம் சுற்று வட் டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல குவாரிகளில் விதிமுறை களை முழுமையாக பின்பற்றாமல் சட்டவிரோதமாக அதிகளவில் கற் களை வெட்டி எடுப்பதுடன், சுற்றிலும் உள்ள குடியிருப்புகள், விவசாயப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பரவலான போராட்டங்கள் நடைபெற்ற நிலை யில், கனிமக் கொள்ளையை தடுக்க மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வந்தார்.
அவர் இங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசால் செவ் வாயன்று அறிவிப்பு வெளியிடப்பட் டது. இது சட்டவிரோத கல்குவாரி உரி மையாளர்களுக்கும், ஊழல் அதி காரிகளுக்கும் நிம்மதியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழனன்று திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட் டம், கோடங்கிபாளையம் கிரா மத்தைச் சேர்ந்த நான்கு கல்குவாரிக ளுக்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. கடந்த மார்ச் மாதம் கோடங்கிபா ளையம் கருத்து கேட்பு கூட்டத்தில், கல் குவாரி உரிமையாளர்களால் திட்டமிட்டு மோதல் போக்கு ஏற்படுத் தப்பட்ட நிலையில், அந்த கருத்து கேட்டு கூட்டத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ரத்து செய்தார். இந்த நிலை யில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், கோடங்கிபாளையத் தில் அமைய இருக்கும் 4 கல்குவாரிக ளுக்கான கருத்து கேட்பு கூட்டம், ஆட் சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் விவ சாயிகள், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட அனைவ ருக்கும் உரிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டும், இக்கூட்டத்தை வெளிப் படைத் தன்மையோடு நடத்த வேண் டும் என்று சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தி உள்ளனர்.