districts

2,344 பேர் தாய்ப்பால் தானம்: 5,511 குழந்தைகள் பயன்

கோவை, செப்.27- கோவை அரசு மருத்துவமனை யில் நடப்பாண்டில் 2 ஆயிரத்து 344 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ள னர். இதனால் 5 ஆயிரத்து 511 குழந் தைகள் பயன்பெற்றுள்ளனர் என மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனை யில் கடந்த 2015 ஆம் ஆண்டு தாய்ப் பால் வங்கி தொடங்கப்பட்டது. இங்கு  பிரசவித்த பெண்கள் தானமாக அளிக் கும் தாய்ப்பால் பாதுகாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பச் சிளம் குழந்தைகள் பிரிவில் உள்ள  குழந்தைகளுக்கும், ஆதரவற்ற நிலை யில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கும் அளிக் கப்படுகிறது. தாய்ப்பால் தானம் குறித்து அரசு மருத்துவமனை நிர்வா கம் சார்பில் தொடர்ந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக ஆண்டுதோறும் தாய்ப் பால் தானம் அளிப்பவர்களின் எண் ணிக்கையும், பயனடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதம் வரை 2 ஆயிரத்து 344 பேர் தாய்ப்பால் தானம் வழங்கியுள்ள னர். இதன் மூலம் 5 ஆயிரத்து 511 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இதுகுறித்து அரசு மருத்துவ மனை முதல்வர் நிர்மலா கூறுகை யில், கோவை அரசு மருத்துவமனை யில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி மூலம் நாள்தோறும் தாய்ப் பால் தானம் பெறப்பட்டு வருகிறது. இந்த தாய்ப்பால் வங்கியில் பாது காப்பான முறையில் தாய்ப்பால்  பராமரிக்கப்பட்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகி றது. ஆதரவற்ற நிலையில் சிகிச் சைக்கு அனுமதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகள், குறைப் பிரசவத்தில், குறைந்த எடையில் பிறக்கும் பச்சி ளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ள குழந்தைகள், பாலூட்ட முடியாத தாய்மார்களின் குழந்தை கள் ஆகியோருக்கு தாய்ப்பால் அளிக் கப்படுகிறது. மேலும், தனியார் மருத் துவமனையில் பிரசவமாகி தாய்ப் பால் பற்றாக்குறை காணப்படும் குழந் தைகளுக்கும் இங்கிருந்து தாய்ப் பால் அளிக்கப்பட்டு வருகிறது, என் றார்.