கோவை, ஏப்.11- கோவை கவுண்டம்பா ளையம் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற் கொண்டார். இந்தியா கூட்டணியில், கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கவுண் டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, குருடம்பாளையம். வி.எஸ்.கே.நகர், அருணா நகர், வடமதுரை, தொப்பம்பட்டி, ராக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, குருடம்பாளையத்தில் ஜமாப் அடித்துக் கொண்டிருந்த இளை ஞர்களிடம் ஜமாப்பை வாங்கி அடித்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மகளி ரணி ரங்கநாயகி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர் கள் திரளானோர் பங்கேற்றனர்.