districts

img

கோவை மறந்த வரலாறு மீட்பு மாநாடு

கோவை, ஜூன் 13- கோவை மறந்த வரலாறு மீட்பு  மாநாடு மே 17 இயக்கம் சார்பில், கோவையில் நடைபெற்றது. இதில்,  மதச்சார்பற்ற கட்சிகள், முற் போக்கு ஜனநாயக அமைப்புகள் பங்கேற்று உரையாற்றினர். இந்திய விடுதலை போராட் டத்தில் தமிழகத்தின் பங்கு அளப் பரியதாகும். சாதி, மத, மொழி அடையாளங்களை மறந்தும், கடந்தும் இப்போராட்டத்தில் எண் ணற்றோர் களம் கண்டனர். இத் தகைய சூழலில் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் எவ்வித பங்கையும் செலுத்தவில்லை என்பது மட்டுமல்லாமல், விடு தலை போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த கூட்டம் இன்று ஒன்றி யத்தில் அதிகாரத்தில் அமர்ந் துள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தின் வரலாற்றை மாற்றி  எழுதிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில், உண்மை வர லாற்றை உரக்கச் சொல்வோம் என்கிற முயற்சியின் ஒருபகுதியாக மே 17 இயக்கத்தினர் கோவை மறந்த வரலாறு மீட்பு மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தியது.  கோவை, உக்கடம்- வின்சென்ட்  சாலையில் நடைபெற்ற இம் மாநாட்டிற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையேற்றார்.  இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது. மதிமுக  மாநிலப் பொருளாளர் மு. செந்தில் அதிபன், தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயாக,  முற்போக்கு இயக்கங்களின் தலை வர்கள் உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.