districts

ஐடி துறையில் கோவை வளர்ச்சி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

கோவை, ஜூன் 14- தகவல் தொழில் நுட்பத்துறையில் கோவை வளர்ச்சி அடைந்து வருவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள டைடல் மற்றும் எல்காட் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா புதனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இப்பூங்காவில் உள்ள நவீன வசதிகள், கட்டுப்பாட்டு அறை களில் ஆய்வு செய்து, அங்கு பணிபுரியும் பணியாளர்களி டம் பணி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இதன்பின்,  டைடல் மற்றும் எல்காட் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலை மையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து சாலைகள் குறித்து விவா திக்கப்பட்டது. இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாவட்டம் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஐடி துறையில் புதிய வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாடுகளுக்கு சென்று புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வந்துள்ளார் என தெரிவித்தார். முன்னதாக, இந்த ஆய்வின்போது டைடல் பார்க் மேலாண் இயக்குநர் நிஷாந் கிருஷ்ணா, டைடல் பார்க்  தலைமை நிர்வாக அலுவலர் வி.விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர் மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.