districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அனைத்து ஜமா-அத் அமைப்புகளுடன் கோவை ஆட்சியர் ஆலோசனை

கோவை, செப்.29- பிஎப்ஐ அமைப்பிற்கு ஒன்றிய அரசு தடை விதித் துள்ள நிலையில், கோவை யில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அனைத்து ஜமா-அத் அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொண் டார். இந்தியா முழுவதும் கடந்த வாரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்புக்குச் சொந்தமான இடங்கள், நிர்வாகிகளில் வீடுகளில் தேசிய குற்றப்புலனாய்வு முகமை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழ கத்திலிருந்து 11 பேரும், இந்தியா முழுவதும் 247  பேரும் கைது செய்யப் பட்டனர். இதனால் கோவை முழுவதும் பதற்றம் நீடித்தது. இதனிடையே பிஎப்ஐ மற்றும் அதன் தொடர்புடைய 8 அமைப்பு களுக்கு 5 ஆண்டுகள் தடை  ஒன்றிய அரசு விதித்துள்ளது.  தொடர்ந்து பிஎப்ஐ அமைப் புக்கு தடை விதித்து தமிழக  அரசும் அரசாணை வெளி யிட்டுள்ளது. இந்த சூழலில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையாளர் பால கிருஷ்ணன் தலைமையில் அனைத்து ஜமா-அத்  அமைப்பினருடன் ஆலோ சனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், கோவை யில் அனுமதியின்றி எந்த  ஒரு கூட்டமும் நடத்தக் கூடாது. போராட்டங்கள் போன்ற சம்பவங்களில் ஈடு படக்கூடாது. மாவட்ட நிர்வா கத்திற்கு முழு ஒத்துழைப் பை வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஜமா-அத் நிர்வாகிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்திற்கு நிச்சயமாக எங்களது ஒத்துழைப்பு வழங்கப்படும். அதேபோன்று, அமைப்பு களுக்கு தடை விதிப்பது நியாயமல்ல, என்றனர்.

அரசின் கொள்கையைப் புரிந்து கொள்ளாமல் தொழில் நெருக்கடியைத் தீர்க்க முடியாது

திருப்பூர், செப். 29 - அரசு பின்பற்றும் கொள்கையின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் சிறு, குறு தொழில் துறையினர் சந்திக் கும் நெருக்கடியைத் தீர்க்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ்  கூறினார். திருப்பூரில் தற்போதைய தொழில் சூழல் குறித்து கலந்து ரையாடல் கூட்டம் புதன்கிழமை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங் கேற்று கே.கனகராஜ் பேசியதாவது: இப்போதைய ஒன்றிய  அரசு அனைத்தையும் மையப்படுத்தி குவித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் அரிசிக்கு 5 சதவிகிதம், தங்கத்துக்கு  3 சதவிகிதம், வைரத்துக்கு 1.5 சதவிகிதம் என நிர்ணயித்துள் ளது. இதில் இருந்தே இந்த அரசு யாருக்கு சார்பாக இருக்கி றது என்பதை புரிந்து கொள்ளலாம். தனிநபர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் ஈட்டினால்  அவருக்கு 30 சதவிகிதம் வருமான வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பல லட்சம் கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு வரி 22 சதவிகிதம் தான். சிறு, குறு,  நடுத்தர தொழில் செய்வோர், உற்பத்தியாளர்கள் அரசின்  இந்த தன்மையை புரிந்து உள்வாங்கிக் கொள்ளாவிட்டால் மிகவும் சிரமம். இந்த அரசு, அரசமைப்பு அடிப்படையில் சுயாட்சியாக செயல்படக்கூடிய ஒவ்வொரு அமைப்பையும் சீர்குலைத்து வருகிறது. சில அமைப்புகளை தன்வயப்படுத்திக் கொண்டி ருக்கிறது. பருத்தி நூல் விலை உயர்வுக்கு இந்திய பருத்திக்  கழகத்தின் கொள்முதலை நிறுத்தியதுதான் காரணம் என  பேசிக் கொண்டிருக்கிறோம். இந்திய பருத்திக் கழகம் மட்டு மல்ல, இந்திய உணவுக் கழகமும் கொள்முதல் செய்வதை கைவிடும்படி இந்த அரசு செய்துள்ளது. கடந்த ஆண்டு 4.44  கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. அதை   தனியார் மூலம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர். இப் போது கோதுமை பற்றாக்குறை, 1 கோடியே 90 லட்சம் டன்  கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது என்றவுடன், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம் என்று கூறுகின்ற னர். உணவுப் பாதுகாப்பைக் கைவிட்டு, கார்ப்பரேட்டுகள் ஏற் றுமதி, இறக்குமதி என இரண்டு வழிகளிலும் லாபம் ஈட்டும்  கொள்கையை இந்த அரசு கடைப்பிடிக்கிறது. இப்படிச் செய்வதால் உணவுப் பொருட்கள் விலைக் குறைப்புக்கு வாய்ப்பே இல்லை.இந்திய பருத்திக் கழகம்,  இந்திய உணவுக் கழகம் எதிலும் அரசு தலையிடுவதில்லை என்ற கொள்கையை பின்பற்றுகிறது. இதைப் பார்ப்பதற்கு  அரசு சந்தையில் தலையிடாக் கொள்கையை பின்பற்றுவதாக  தெரியும். ஆனால் அது உண்மையல்ல. வலுத்தவனை வாழ  வைப்பது என்ற கொள்கையைத்தான் இந்த அரசு பின்பற்றுகி றது. காவல் துறை சமூக விரோதிகளுக்கு ஆதரவு கொடுத் தால் எப்படி இருக்கும்? அது போலத் தான் இந்த அரசு பாதிக் கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதற்கு மாறாக கொள்ளையடிப்ப வர்கள் பக்கம் இருக்கிறது. அதேபோல் வங்கிகள் விசயத்திலும் அரசின் நிதிக் கொள்கை, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகத்தான் உள்ளது.  சம மட்டப் போட்டி என்று சொல்வது ஏமாற்றுத்தனம். பெரிய  மீன், சின்ன மீன் இரண்டும் வாயைத் திறக்கலாம், எந்த மீனால்  முடிகிறதோ அந்த மீன் பசியாறலாம் என்று கதை சொல் வதைப் போலத்தான் அரசின் கொள்கையும் உள்ளது. இந்த அடிப்படை விசயத்தைப் புரிந்து கொண்டு சிறு, குறு  தொழில் துறையினர் அனைவரும் விரிவான அளவில் ஒன்றுப டுவது தான் இப்பிரச்சனையை தீர்க்க முடியும். விடாப்பிடி யான தொடர்ச்சியான நடவடிக்கைக்குப் போக வேண்டும்.  இவ்வாறு கே.கனகராஜ் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள் பட தொழில் துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அவிநாசி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர் தர்ணா

அவிநாசி, செப்.29 - கோரிக்கையை வலியுறுத்தி, அவிநாசி பேரூராட்சி மன்ற பெண் உறுப்பினர் தர்ணாவில் ஈடுபட்டார். அவிநாசி பேரூராட்சிமன்றக் கூட் டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவர்  தனலட்சுமி பொன்னுசாமி தலைமை  வகித்தார். பேரூராட்சி செயல் அலுவ லர் செந்தில்குமார், துணைத் தலை வர் மோகன்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர் கள் விவாதம் நடத்திய விபரம் வரு மாறு: சிவபிரகாஷ்: சூளை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அடுக் குமாடி குடியிருப்புகளில், சரியான வடிகால் வசதியில்லாமல் பிரதான கால்வாயில் கலக்காததால், ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லிட்டர்  கழிவுநீர் வெளியேறுகிறது. மேலும்  குடியிருப்புகளில் புகுந்து, சுகாதா ரக்கேடு ஏற்பட்டு வருகிறது. உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். கார்த்திகேயன்: அவிநாசி பேரூ ராட்சி சுகாதாரப்பணியாளர்கள் 40 பேருக்கு அவிநாசி அடுக்குமாடி குடி யிருப்பில் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ள வீடுகளை ஆட்சியர் அறிவு றத்தல் படி, விரைந்து வழங்க வேண் டும். எஸ்.தேவி: டி.எஸ்.பி. ஆபீஸ் பகுதி, நாய்க்கன்தோட்டம், நாரா யணா கிளீனிக் ஆகிய பகுதிகளில் தார்ச்சாலை, சாக்கடை வடிகால் அமைக்க வேண்டும். பேரூராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்று மின் இணைப்பிலிருந்து சட்ட விரோ தமாக மின் இணைப்பை எடுத்து தனி யார் உபயோகப்படுத்தி வருகின்ற னர். உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். சசிகலா: வி.எஸ்.வி.காலனியில் பழுதடைந்த 3 மின்கம்பங்களை மாற்றவேண்டும்.

சேவூர் ரோடு பண் ணாரியம்மன் கோயில் சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேகத்தடை அமைக்க வேண் டும். வ.உ.சி. பூங்காவில் சுற்றுச்சுவர்  அமைத்து, நிரந்தர பணியாளர்களை அமர்த்தி, பூங்காவை பராமரிக்க வேண்டும். திருமுருகநாதன்: பேரூராட்சி நிர் வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட வடி கால், சாலை, ரிசர்வ் சைட்டுகள் குறித்த ஆவணங்களை வழங்க வேண்டும். தற்போது பேருந்து நிலை யத்தில் பேரூராட்சி சார்பில் பல கோடி  மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் வணிக வளாகத்திற்கு, வருவாய்த் துறையிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று பணி செய்ய வேண் டும். இதற்கிடையே, உறுப்பினர் ஸ்ரீ  தேவி, 18 ஆவது வார்டில் வளர்ச்சி  பணிகள் எதுவும் மேற்கொள்ள வில்லை எனக் கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார். அப்போது பேரூராட்சி செயல்  அலுவலர் செந்தில்குமார் கூறுகை யில், கைகாட்டிப்புதூர், அவிநாசிங் கம்பாளையம் வீதியில் வடிகால் உள் ளிட்ட பணிகள் மேற்கொள்ள ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள தொகையை விட அதிகமாக உள்ளது. அடுத்த நிதி  ஒதுக்கீட்டில், கோரிக்கை நிறைவேற் றப்படும். தற்போது ஒதுக்கீடு செய் யப்பட்ட நிதியில், குமரன் வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து ஸ்ரீதேவி தர்ணாவை கைவிட்டார். இதைத்தொடர்ந்து 31 மன்ற பொருள் கள் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

வாகன விபத்தில் இளைஞர் பலி

அவிநாசி, செப்.29 – அவிநாசி அருகே அ.குரும்பபாளையம் பகுதி யைச் சேர்ந்த ராஜேஷ் மகன்  விஷ்ணு (20). இவர் ஆட்டை யாம்பாளையத்தில் இருந்து வெள்ளியம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந் தார். வெள்ளியம்பாளையம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனம், புதன்கி ழமை காலை புதிதாக அமைக்கப்பட்ட வேகத்த டையை கடக்கும்போது, கட் டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி இடது புறம்  சாலையோரம் நிறுத்தி யிருந்த வேன் மீது மோதி  விபத்துக்குள்ளானது. இதில்  பலத்த காயமடைந்த விஷ்ணு அவிநாசி அரசு  மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு, சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். 

கோவையில் இருந்து திருப்பூர் வழியாக மதுரைக்கு காலை நேர ரயில் இயக்க கோரிக்கை

திருப்பூர், செப். 29- கோவையில் இருந்து திருப்பூர் வழி யாக மதுரை, ராமேஸ்வரத்திற்கு காலை நேர விரைவு ரயில்களை இயக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜனுக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் தொழில் மையமா கவும், அதிக வேலை வாய்ப்புகளை யும், அந்நியச் செலாவணியை நாட் டிற்கு அளிக்கும் நகரமாகவும் உள் ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் இருந்தும், வெளி மாநிலங்க ளில் இருந்தும் வேலை வாய்ப்பிற்காக இங்கு வந்து செல்கின்றனர். தற்போது கோவையில் இருந்து திருப்பூர் வழியாக மதுரைக்கு காலை மற்றும் இரவு என இரண்டு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. தினசரி காலை நேரத்தில் திருப்பூர் வழியாக விரைவு ரயிலாக இயக்கினால் அது  தொழில் நிமித்தமாகவும், வேலை  வாய்ப்பிற்காக சென்று வருபவர்க ளுக்கு பயனுள்ள வகையில் அமை யும். இதுபோல் இராமேஸ்வரத்திற்கும் கோவையில் இருந்து திருப்பூர் வழி யாக தினசரி விரைவு ரயில் இயக்கி னால் மத்திய, கிழக்கு, தென் மாவட் டங்களுக்குச் செல்பவர்களுக்கு பேரு தவியாக இருக்கும். இக்கோரிக் கையை கணக்கில் கொண்டு இந்த வழித் தடத்தில் மேற்கண்ட முரையில் புதிய  ரயில்களை இயக்கிட உரிய நடவ டிக்கை எடுக்குமாறு செ.முத்துக்கண் ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தொழிலாளர் சேவை மையம் தொடக்கம்

திருப்பூர், செப். 29 - திருப்பூர் பாண்டி நகரரில்  சிஐடியு திருப்பூர் மாவட்ட கட்டட கட்டுமான தொழிலா ளர் சங்கத்தின் நலவாரியப் பதிவு தொழிலாளர் சேவை மையம் வியாழக்கிழமை துவக்கப்பட்டது.சிஐடியு பஞ்சாலை சங்க மாவட்டத் தலைவர் கே.பழனிச்சாமி திறந்து வைத்தார். மார்க் சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன் றியச் செயலாளர் ஆர்.காளி யப்பன் மடிக்கணினியை இயக்கி வைத்தார். கட்டு மான சம்மேளத்தின் மாநிலச்  செயலாளர் டி.குமார், மாவட்ட செயலாளர் ஏ. ராஜன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

கோவை, செப்.29- கோவையில் தனது 4 வயது குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. கோவை, நவக்கரையை சேர்ந்தவர் முத்துக்குமார் (40). இவரது மனைவி ராதாமணி (37). இவர்களுக்கு கடந்த 12 வரு டங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் அவர்களது 2 ஆவது மகளான சன்மதி (4) கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால், ராதாமணி சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ராதாமணி நவக்கரை யில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்று, அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இது குறித்து கே.ஜி.சாவடி காவல் துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்து காவல் துறையினர் ராதாமணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோத னைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

சிறுமியை கடத்தி மகனுக்கு திருமணம் போக்சோவில் தாய் கைது

சேலம், செப்.29- சிறுமியை கடத்தி தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த தாயை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் லட் சுமி (47). இவருடைய உறவினர் ஒருவர் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா டேனீஷ்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இந்த உறவினர் வீட்டுக்கு லட்சுமியின் மகன் ரமேஷ்குமார் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ரமேஷ்குமா ருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே ரமேஷ்குமாரின் தாய் லட்சுமி, தனது மகனுக்கு பல்வேறு இடங்களில் வரன் பார்த்து வந்தார். ஆனால் பெண் கிடைக்கவில்லை. கடந்த  செப்.22 ஆம் தேதியன்று லட்சுமி, டேனீஷ்பேட்டைக்கு சென்று  அங்கு வீட்டிலிருந்த சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பெற்றோருக்கு தெரியாமல் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதற்கிடையே மகளை பல்வேறு இடங்களில் தேடி யும் கண்டுபிடிக்க முடியாத பெற்றோர், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.  அதன்பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டதில், சிறுமியை லட்சுமி கடத்தி சென்றிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பொம்மிடிக்கு சென்று சிறு மியை பத்திரமாக மீட்ட காவல் துறையினர், லட்சுமி மீது  போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அஸ்தம்பட்டி யில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

கோவை, செப்.29- கோவையிலிருந்து அக்டோபர் முதல் ஜனவரி வரை திருவிழா கால சிறப்பு ரயில் களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் கள் ஆலோசனைக்குழு கூட்டம், கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கோவையிலிருந்து ஆலோ சனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்று தங்க ளின் கோரிக்கைகளை முன்வைத்து வலியு றுத்தினர். அதில் அவர்கள் கூறியிருப்பதா வது, 2023 பிப்ரவரியில், கோவை ரயில் நிலை யத்தின் 150 ஆவது ஆண்டு தொடக்கத்தை, சிறப்பு விழாவாகக் கொண்டாட குழு அமைக்க வேண்டும். கோவையில் போக்குவரத்து நெரி சலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ரயில் நிலைய மறு சீரமைப்புத் திட்டத்தில் கோவை ரயில் நிலை யம், வடகோவை, மேட்டுப்பாளையம் நிலை யங்கள் சேர்க்கப்பட வேண்டும். போத்தனூர்  நிலையத்தை முனையமாக உருவாக்க வேண்டும். விடுமுறை நாட்களில் பயணிக் கும் மக்களுக்கு வசதியாக, திருவிழா கால சிறப்பு ரயில்களை அக்டோபர் முதல் ஜனவரி வரை கோவையிலிருந்து இயக்க வேண்டும். கோவை - சென்னை மற்றும் கோவை - பெங்க ளூரு இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் களை, ஒரே நாளில் சென்று திரும்பும் வித மாக இயக்க வேண்டும். மேலும், பொள்ளாச்சியிலிருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையம், திருப்பூர் வழி யாக ஈரோட்டுக்கு மின்சார ரயில்களை இயக்க வேண்டும். போத்தனூர் வழித்தடத் தில் இயக்கப்பட்டு வரும் கொச்சி - ஹூப்ளி,  எர்ணாகுளம் – டாடா நகர் ரயில்களை, கோவை நிலையம் வழியாக இயக்க வேண் டும். பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலை, மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும். கோவை - பெங்களூரு உதய் விரைவு ரயிலை, ஓசூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும். முக்கியமான விரைவு ரயில்களை போத்தனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். எர்ணாகுளம் - பாலக் காடு இடையே இயக்கப்படும் மெமு ரயில் சேவையை, கோவை வரை நீட்டிக்க வேண் டும். மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு இயக்கப்படும் மெமு ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண் டும் என தெரிவித்துள்ளனர்.

மாணவர்களை தேடி நடமாடும் நூலகம்

உதகை, செப்.29- பர்ன்ஹில் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் ரூ.1 லட்சம் பணம் மற்றும் 8 பவுன் நகை திருட்டு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், போலீசார் பிடித்து விடுவார்களோ என்ற அச் சத்தில் 8 பவுனை திருடிவிட்டு 3 பவுன் நகையை வீட்டு வாசலில் கொண்டு வந்து போட்டுவிட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. என்ஜி னியர். இவர் தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்.  இவர் தன்னுடைய மகனை நீலகிரி மாவட்டம், உதகையில்  உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் படிக்க வைப்பதற்காக பர்ன்ஹில் பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருக் கிறார். இந்நிலையில், கடந்த செப்.19 ஆம் தேதி நாச்சிமுத்து வீட்டின்  அருகில் இருந்த ஒரு வீட்டில் ரூ.1 லட்சம் பணம் திருடு போனது. இதனால் பதறிப்போன நாச்சிமுத்து சோதனை செய்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 8 பவுன் நகை  மாயமாகி இருந்தது. இதுகுறித்து உதகை மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி ஆய்வாளர்  மணிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதனன்று காலை நாச்சிமுத்துவின் மனைவி வீட்டின் முன்பு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது வீட்டில் முன்பு ஒரு பார்சல் கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் 3 பவுன் நகை மட்டும் இருந்தது. போலீசார் போனில் பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவு களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்ததால், போலீ சில் சிக்கிக் கொள்வோம் என்று பயந்த திருட்டு ஆசாமி, வீட் டின் முன்பு வந்து வந்து நகையை போட்டு விட்டு சென்றிருக் கலாம் என்று தெரிகிறது. இதனால் இந்த திருட்டு சம்பவத்தில் அறிமுகமான நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீ சார் தெரிவித்தனர்.

பருத்தி ஏலம்

தருமபுரி, செப்.29- அரூர் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கம்  சார்பில் வியாழனன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இங்கு அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப் பட்டி உட்பட பல்வேறு பகுதி களில் இருந்து விவசாயிகள், 500 மூட்டை பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந் தனர். இவற்றை கோவை, பல் லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலம்  எடுத்தனர். மொத்தம் ரூ.7½ லட்சத்திற்கு ஏலம் நடை பெற்றது.