districts

img

கோவை: 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி 125 அடி உயரத்தில் விழிப்புணர்வு பலூன் 

கோவையில் மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பு உறுதி செய்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன்  பறக்கவிடப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பு குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன் பறக்க விடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி பறக்கவிட்டார். சுமார் 125 அடி உயரத்தில் பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. 

முன்னதாக மாற்றுத்திறனாளி வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் அனைவரும், தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்தல் விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தினார்.  இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் சாக்சம் ஆப்-ல்  வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.