districts

img

திருப்பூர் நியூ அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பாரில் கரப்பான் பூச்சி

திருப்பூர், ஜூன் 20 - திருப்பூர் ரயில் நிலையம் அருகில்  உள்ள நியூ அன்னபூர்ணா ஹோட்டலில் பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்தது. இதனால் உணவு சாப்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந் தனர்.  நியூ அன்னபூர்ணா ஹோட்டல் அருகே வியாழன் அன்று எல்ஐசி முகவர் கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.இந்தக்  கூட்டத்திற்கு பின்பாக அவர்களுக்கு நியூ அன்னபூர்ணா ஹோட்டலில் மதிய  உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அங்கு சென்று உணவு அருந்திய  போது, செல்வராணி என்பவருக்கு  பரிமாறப்பட்ட உணவில், சாம்பார் ஊற் றியுள்ளனர். அதில் கரப்பான் பூச்சி  இறந்து கிடந்தது. இதைப் பார்த்து  அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்த வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  உடனடியாக ஹோட்டல் நிர்வாகத் தினரிடம் இதுகுறித்து புகார் கூறியுள்ள னர்.  எனினும் உடனடியாக சாம்பார் பரி மாறுவதை நிறுத்திக் கொள்ளாமல், மற்ற மேஜைகளில் சாப்பிட்டுக் கொண் டிருந்தவர்களுக்கும் தொடர்ந்து சாம் பார் பரிமாறப்பட்டது, என்று எல்ஐசி முக வர்கள் கூறினர். கரப்பான் பூச்சி இருப்பதை ஆதாரப் பூர்வமாக தெரிவித்த பிறகும் மீண்டும் அதே சாம்பாரை மற்றவர்களுக்கு பரி மாறுவதா என்று கடும் எதிர்ப்பு தெரிவித் தனர். இதன் பிறகு சாம்பார் பரிமாறு வதை நிறுத்திக் கொண்டதாக, அந்த  எல்ஐசி முகவர்கள் தெரிவித்தனர்.  மேலும் நியூ அன்னபூர்ணா ஹோட்ட லில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய் திருந்த எல்ஐசி நிர்வாக அதிகாரிகளிட மும் இதுகுறித்து புகார் கூறியிருப்ப தாக அவர்கள் தெரிவித்தனர்.  திருப்பூரில் பிரபலமான நியூ அன்ன பூர்ணா ஹோட்டலில் சாம்பாரில் கரப் பான் பூச்சி இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி  உள்ளது. குழந்தைகள் உட்பட இங்கு  உணவு அருந்தினர்.இவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? எனவே உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இதுகுறித்து  அந்த ஹோட்டலில் ஆய்வு செய்து சட் டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் எல்ஐசி முகவர்கள்  கேட்டுக் கொண்டனர்.