districts

img

உணவில் கரப்பான் பூச்சி தனியார் உணவகத்தில் சோதனை

உணவில் கரப்பான் பூச்சி தனியார் உணவகத்தில் சோதனை சேலம், நவ.1- செவ்வாய்பேட்டை பகு தியில் உள்ள தனியார் உண வகத்தில், பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படை யில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், செவ்வாப்பேட்டை அருகே உள்ள பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர் செவ்வாயன்று காலை தனது குழந்தைகளுக்காக செவ்வாய் பேட்டை பகுதியிலுள்ள குப்தா ஸ்வீட்ஸ் உணவகத்தில் காலை சிற்றுண்டி வாங்கி சென்றுள்ளார்.  இதில் உணவில்  கரப்பான் பூச்சி இறந்து கிடப்பதைக் கண்டு சங்கர் அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து உணவாக மேலாளரிடம் முறையிட் டதற்கு முறையான பதில் கூறாததால் சங்கர் உணவு பாது காப்பு துறை அலுவலகத்தில் புகாரளித்தார். அதனடிப்படை யில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுருளி தலைமை யிலான அதிகாரிகள் சேலம் குப்தா ஸ்வீட்ஸ் உணவகத்தில் சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்யப்பட்டு வரு கிறதா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். அப் போது, தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவினை பரிசோத னைக்காக ஆய்விற்கு எடுத்துச் சென்றனர். ஆய்விற்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.