districts

img

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்

தருமபுரி, ஜூலை 29- ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்திட வலியுறுத்தி தரு மபுரி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலு வலகம் முன்பு  கூட்டுறவுத்துறை வங்கி  ஊழியர்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,  நகர கூட்டுறவு வங்கி மற்றும் பிகார்டு  வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை மீது உடனடியாக பேச்சு வார்த்தை துவக்கிட வேண்டும். மத்திய  கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலா ளர் பதவிகளில் நேரடி நியமனத்திற்கு 3:1 என ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங் களை உடனடியாக பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும். மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிக்கு எஸ்ஆர்பி மூலம் 2015 -2016 ஆண்டுகளில் பணியமர்த்தப் பட்ட உதவியாளர்களின் பணிமூப்பு  பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். தேர்வுநிலை  ஊதியப் பெருக்கம் 12 ஆண்டுகள் என்பதை மாற்றி 7 ஆண்டுகள் பணி முடித்தவுடன் வழங்கிட வேண்டும். ஈட்டிய விடுப்பு  ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறும் சலுகை நிறுத்தி வைத்துள்ளதை விடு வித்து ஆணைப்பிறப்பிக்க வேண்டும். கருணை ஓய்வூதியத்தை ரூ.10000 ஆக  உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் என்.ராமமூர்த்தி  தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கே.கே. சரவணன், மாவட்ட செயலாளர் ஆர். தேவராஜன், நகர கூட்டுறவு வங்கி ஊழி யர் சங்க நிர்வாகிகள் செந்தில்வேலன், முருகன், ஓய்வுபெற்றோர் அமைப்பின் தலைவர் பெரியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.