districts

img

பேருந்து நிலையம் கட்ட முதல்வர் அடிக்கல்

நாமக்கல், பிப்.24- குமாரபாளையத்தில் பேருந்து நிலையம் கட்ட தமிழக முதல்வர் காணொளி மூலம் அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.738 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  ரூ.902 லட்சம் மதிப்பீட்டில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ரூ.728 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீரை சேகரம் செய்து  குழாய் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சனியன்று காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். குமாரபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு  நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். எம்.மதுரா செந்தில் கலந்துகொண்டு பணியினை துவக்கி  வைத்தார். இந்நிகழ்வில் நகர்மன்றத் தலைவர் விஜய்கண் ணன், திமுக தெற்கு நகரப் பொறுப்பாளர் ஞானசேகரன், நகர் மன்ற துணைத்தலைவர் வெங்கடேசன், நகராட்சி ஆணையா ளர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், நகர்மன்ற உறுப் பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.