districts

img

உரிமம் பெறாத சட்டவிரோத மதுபானக்கூடங்கள் மூடல்

கண்துடைப்பா டாஸ்மாக் நிர்வாகத்தின் கறார் நடவடிக்கையா?

கோவை, பிப்.18- சிஐடியு டாஸ்மாக் ஊழியர்  சங்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக சட்ட விரோதமாக இயங்கி வந்த டாஸ்மாக் மதுக் கூடங்களை மூடுவதற்கான நடவ டிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது வெறும் கண்துடைப்புக்கான நடவ டிக்கையாக இருந்துவிடக்கூடாது என்கிற குரலும் டாஸ்மாக் ஊழியர் கள் மத்தியில் எழுந்து வருகிறது.  தமிழ்நாடு அரசின் நிறுவன மான டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ்  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ் மாக் மதுபான கடைகள் செயல் பட்டு வருகிறது. கோவை மாவட் டத்தில், வடக்கு மாவட்டத்தில் 166   கடைகளும், கோவை தெற்கு மாவட்டத்தில் 139 கடைகளும் இயங்கி வருகிறது. இந்த மது பான கடைகளை ஒட்டியே டாஸ்மாக் மதுபான கூடங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த  மதுக்கூடங்கள் நடத்த டெண்டர்  விடப்பட்டு, அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்கள் வைப்புத் தொகை செலுத்திய பின்னர் மதுக் கூடங்கள் நடத்த அனுமதிக்கப் படும். இத்தகைய மதுக்கூடங் களில், விற்கப்படும் பொருட்களின் விலை இரண்டு மடங்கு, மூன்று  மடங்கு அதிகம் என்பது ஒருபுற மிருக்க, சமீப காலமாக இந்த  டாஸ்மாக் மதுபான கூடங்களை ஏலம் எடுக்காமலும், உரிமம்  புதுப்பிக்காமலும், எவ்வித தடங் ்கலுமின்றி மதுபானக்கூடங்கள் இயங்கி வருகிறது என்பதே  குற்றச்சாட்டு. இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக் கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த சட்டவிரோத மதுபானகூடங்களில், டாஸ்மாக்  மதுபானக்கடை செயல்படுகிற நேரத்தை காட்டிலும், மூடப்பட் டிருக்கும் நேரங்களில்தான் வியா பாரம் இறக்கை கட்டிப்பறக்கிறது. பாட்டிலுக்கு ரூ20 முதல் ரூ50 வரை யில் அதிக விலை வைத்து மதுப் பிரியர்களிடம் கொள்ளையடிக் கப்படுகிறது. இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரு வாய் இழப்பு என்பதும், மதுப்பிரி யர்களுக்கு அன்றாடம் இழப்பு என்பது தொடர்கிறது.

அதேநேரத்தில், அரசுக்கு வரு வாயை அள்ளித்தருகிற டாஸ்மாக் ஊழியர்களின் காலமுறை ஊதியம், அரசு ஊழியர்களாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களோ தொடர்ந்து நிராகரிக்கப்படு கிறது.  இந்நிலையில், சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சங்கம் மற்றும் டாஸ் மாக் தொழிற்சங்க கூட்டமைப் பினர் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகிற அதே நேரத்தில், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத  மதுபானகூடங்கள் குறித்தும் போராட்டங்களை நடத்தி வரு கிறது. இதன் ஒருபகுதியாக கடந்த  வாரத்தில், கோவை மாவட் டத்தில் முறையாக உரிமம் பெற்று  இயங்கக்கூடிய மதுபானக்கூடங் கள் எவை, சட்டவிரோதமாக செயல்படும் மதுபானக்கூடங்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள  300 டாஸ்மாக் மதுக்கடை களையொட்டி செயல்படும் மது பானக்கூடங்கள் சுமார் 150க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் உரிமம் புதுப்பிக்காமல், சட்ட விரோதமாக இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது. இதனை யடுத்து, தமிழ்நாடு முதல்வர், மது விலக்குத்துறை அமைச்சர், டாஸ்மாக் பொது மேலாளர் உள் ளிட்ட துறைசார்ந்த அனைத்து அதி காரிகளுக்கும் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் இயக்கங்கள் நடத்தி புகார்களை அளித்தனர். சட்டவிரோத மதுக்கூடங்களால் பய னடைந்து வரும் டாஸ்மாக் நிர்வாக த்தில் உள்ள அதிகாரிகள், இத்த கைய புகார்களை புறம்தள்ளி யது. ஒரு கட்டத்தில் தொழிற்சங்க  தலைவர்களை பழிவாங்கும்  நோக்கத்தோடு, பணியிட மாற்றம் செய்து அச்சுறுத்தப்பார்த்தது. ஆனால், எதனையும் எதிர்கொள் ளும் துணிச்சலுடன் செயல்படும் சிஐடியு சங்கத்தினர், அடுத்தடுத்த போராட்ட இயக்்கங்களை திட்ட மிட்டு டாஸ்மாக் நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, அழுத்தத்தை உருவாக்கியது. 

இந்நிலையில், அடுத்த கட்ட  போராட்டத்திற்கு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு தயா ராகி வந்த நிலையில், தற்போது  டாஸ்மாக் நிர்வாகம் அவசர அவசரமாக உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக இயங்கி வருகிற மது பானக்கூடங்களை மூட உத்தர விட்டது. இதன்ஒருபகுதியாக கோவை தெற்கு மாவட்டத்தில் பெரும்பாலான சட்டவிரோத டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டது. வடக்கு மாவட்டத்திலும் உரிமம் பெறாத பார்களை மூடுவதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.  இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் கள் கூறுகையில், கோவை மாவட் டத்தில் உள்ள பெரும்பலான உரிமம் பெறாமல் சட்டவிரோத மாக செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்கள் டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் இழுத்து  மூடப்பட்டு வருவது வரவேற்க தக்கது என்றாலும், இந்நடவ டிக்கை டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். கண்துடைப்பிற்காக இந்நடவடிக்கை அமைந்து விடக் கூடாது. அதேபோல, இதுநாள் வரையில், சட்டவிரோமாக மதுக் கூடங்கள் இயங்கி வந்துள்ளது என்பதை டாஸ்மாக் நிர்வாகம் ஒத்துக்கொள்வதால், இதனை நடத்தி வந்தவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுத்து, அரசுக்கு ஏற்பட்ட  வருவாய் இழப்புகளை இந்த மது பானகூட உரிமையாளர்களிடம் அபராதமாக வசூலிக்க வேண் டும். இப்படியான நடவடிக்கை கள் தான் எதிர்காலத்திலும், சட்டவிரோதமாக மதுபானக்கூடங் கள் நடத்தும் துணிவு வராது என்றனர்.