திருப்பூர், ஜூன் 14 - பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க உடுமலையில் அரசுப் பேருந்து கூடு கட்டும் பணிமனை, திருப்பூர் அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அதிகாரிகளின் மெத் தனப் போக்கினால் மூடப்பட்டுவிட் டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செயலாளர் கே.தண்டபாணி விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கடந்த 1973 ஆம் ஆண்டு தனியார் பேருந்துகள் அனைத்தும் அரசு பேருந்து போக்குவ ரத்து கழகமாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது உடுமலைப்பேட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் பெட்ரோல் பங்க் உடன் பணிமனை யும் இருந்தது. இதில் பெட்ரோல் பங்க் தனியாருக்கும், பணிமனை அரசுக்கும் ஒதுக்கப்பட்டது. பேருந்து இயக்கத்திற்கு இடவசதி போதாத காரணத்தால் அரசு பேருந்து பணிமனையை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் மாற்றம் செய் யப்பட்டு இயங்கியது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த பணி மனை இயங்காமல் காலியாக இருந்தது. சிறிது காலம் கழித்து காலியாக இருந்த பணிமனையை விற்பனை செய்வதற்கு அரசு நிர் வாகம் விளம்பரம் செய்தது. இந்நி லையில் அரசுக்கும், தனியாருக் கும் பணிமனை தொடர்பாக ஒப் பந்த சட்ட சிக்கல் ஏற்பட்டது. இப்பி ரச்சினையை முடிவுக்கு கொண்டு வர, கடந்த 1981 ஆம் ஆண்டு பொள் ளாச்சியில் இயங்கிக் கொண்டி ருந்த பஸ் கூண்டு கட்டுமானப் பிரி வின் மேற்பார்வையில், உடுமலை யில் காலியாக இருந்த பணிமனை யில் மேஜர் பாடி யூனிட் 2 என்ற பெய ரில் பஸ் கூடு கட்டும் பிரிவும், விபத்தில் சிக்கிய அரசு பேருந்து களை பழுது நீக்கும் பிரிவும் துவக் கப்பட்டது. இதற்கு வேண்டிய உபக ரணங்கள் மற்றும் பணியாளர்கள், இயந்திரங்கள் அனைத்தும் பொள் ளாச்சி கூடு கட்டும் பிரிவில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வேலை நடைபெற்றது.
இங்கு தமிழ்நாடு காவல் துறையை சார்ந்த புதிய வாகனங்க ளுக்கு கூடு கட்டி வழங்கப்பட் டது. அந்தமான் நிக்கோபார் தீவுக்கு புதிய வாகனம் அலுமினியத்தால் கூடு கட்டி வழங்கப்பட்டது. டெல் லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது புதிய வாகனம் கூடு கட்ட தேவையான உதிரி பாகங்கள் செய்து கொடுக் கப்பட்டது. இவற்றுக்கு உட்பட்ட அரசு பேருந்துகள் ஒப்பந்த அடிப்ப டையில் பழுது நீக்கி வழங்கப்பட் டது. தமிழ்நாடு தீயணைப்பு துறைக்கு வேண்டிய புதிய வாக னங்கள் அதிகப்படியாக கூடு கட்டி வழங்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்திற்கு புதிய வாகனம் அலுமினியத்தால் கூண்டு கட்டி வழங்கப்பட்டது. புறநகரப் பேருந்துகளை நகரப் பேருந்துக ளாக மாற்றம் செய்து கோவை மண் டலத்திற்கு வழங்கப்பட்டது. தமிழ் நாட்டில் வேறு மாவட்டங்களில் இயங்கும் போக்குவரத்து கழகங்க ளின் புதிய பேருந்துகளுக்கும் இங்கு புதிய கூடு கட்டி வழங்கப் பட்டது.
1981 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டு 2015 ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகளாக 300க்கும் மேற் பட்ட புதிய வாகனங்கள், பேருந்துக ளாக கூடு கட்டி வழங்கப்பட்டது. பின் புதிய வாகனம் கூடு கட் டும் பணியை நிறுத்தி எப்சி யூனிட் என்ற பெயரில் பழைய பேருந்து களை பழுது நீக்கி தரச் சான்றுக்கு தயார் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி உடன் எப் சி யூனிட்டை மூடுவதாக அறிவித்து அங்கு பணி செய்த பணி யாளர்களை இடமாறுதல் செய்து பணிமனையை மூடிவிட்டார்கள். சிறப்பாக பணிகள் நடைபெற்ற பணிமனையை அதிகாரிகளின் சூழ்ச்சியாலும், மெத்தன போக்கா லும் மூடும் நடவடிக்கை நடைபெற் றுள்ளது. இதற்கு முழு பொறுப்பு திருப்பூர் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அதிகாரிகளே ஆவர். இச்சம்பவத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை நகர கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு கே.தண்ட பாணி கூறியுள்ளார்.