districts

img

திம்பம் மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்துக்கு அனுமதி கோரி கடையடைப்பு

ஈரோடு, ஏப்.11- திம்பம் மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்துக்கு அனுமதி கோரி திங்களன்று சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய பகுதியில் கடைய டைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு – கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் திண்டுக் கல் – பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் உள்ள வன சாலை யில் இரவு நேர வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும், 16.2 டன் எடை அளவுள்ள 6 மற்றும் 10 சக்கர லாரிகள் மட்டுமே காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக திம்பம் சாலை யைப் பயன்படுத்தும் கனரக லாரி ஓட்டு நர்கள் மற்றும் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பண்ணாரி மற்றும் தமிழக – கர்நாடகா மாநில எல்லையில் உள்ள காரப்பள் ளம் சோதனைச்சாவடிகளில் 16.2 டன் எடை அளவுள்ள சரக்கு லாரிகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வனத்துறையினர் அனுமதிப்பதால் மற்ற கனரக வாக னங்கள் செல்ல முடியாகமல் காத்தி ருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. எனவே, திம்பம் மலை சாலையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி கோரி திங்களன்று சத்தியமங்கலம் பேருந்து நிலையம், கோவை சாலை, கோபி சாலை, அத்தாணி சாலை, கடைவீதி, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதே போல், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட கடைகள்  அடைக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டம் முழுவதும் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர் சங் கத்தினர் அறிவித்துள்ளனர்.