அவிநாசி, ஜூலை 14- அவிநாசி அருகே திரு முருகன் பூண்டி பேரூராட்சி அலுவகம் முன்பு செவ்வா யன்று சிஐடியு தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
தினக்கூலி ஒப்பந்ததாரர் மற்றும் தூய் மைப் பணியாளர்களுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர் களை காப்பீடு திட்டத்தில் இணைத்து ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா தொற்று பாதித்த தொழிலா ளர்களுக்கு முறையான சிகிச்சை தருவது டன், தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரண மாக வழங்க வேண்டும்
. திருச்சி மாநகராட்சி யில் 20 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்ததை ரத்து செய்து மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு தூய் மைப் பணியாளர்கள் திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சிஐடியு மாவட் டச் செயலாளர் ரங்கராஜ், திருமுருகன் பூண்டி நிர்வாகி வையாபுரி, ஒன்றிய நிர் வாகி சுப்பிரமணி உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.