நாமக்கல், ஜன.23- திருச்செங்கோடு நகரப் பகுதிகளிலுள்ள பேருந்து நிறுத்தக் கூடங்களில் ஒட்டப் பட்டுள்ள சுவரொட்டிகளை தனியார் அமைப்பினர் அகற்றி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரப் பகு திகளில் உள்ள பேருந்து நிறுத்தக் கூடங்களில், விளம் பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பராமரிப்பின்றி காணப் பட்டன. இந்நிலையில், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில், முதற்கட்டமாக சீத்தாராம்பாளையம் பேருந்து நிறுத்தக் கூடத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் சுத்தம் செய் யும் பணியை தொடங்கினர். இதுபோன்று நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தக் கூடங்களை சுத்தம் செய்ய உள்ளதாகவும், சுத்தம் செய்த பிறகு அனைத்து பேருந்து நிறுத்தக் கூடங்களையும் பராமரிக்க போவதாகவும், தயவுசெய்து யாரும் கூடங்களில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.