அவிநாசி, அக்.27 - திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப்பணியை தனியாருக்கு விட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி 18 நகர் மன்ற உறுப்பினர்கள் ஆணையரை சந் தித்து கோரிக்கை மனு அளித்தனர். திருமுருகன்பூண்டி நகராட்சி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நகரமன்ற உறுப்பி னர்கள் நகராட்சி ஆணையர் பி.ஆண்ட வன் மற்றும் நகர்மன்ற தலைவர் ந. குமார் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, திரு முருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டு கள் உள்ளன. தூய்மைப்பணி தனியா ருக்கு விடப்பட்ட ஐந்து மாதங்களுக்கு மேலான நிலையில், நகராட்சி முழுவ தும் பொதுச் சுகாதாரம் கேள்விக்குறி யாகி உள்ளது. குறிப்பாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வதில்லை, இத னால் புழு மற்றும் கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று அபாயம் உள்ளது. தனியா ருக்கு டெண்டர் விட்ட பின்பு ஏற்பட்ட நிகழ்வுகள் காரணமாக நகராட்சி கவுன் சிலர்கள் வார்டு பகுதிக்குள் செல்ல முடி யாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தூய்மைப் பணியை தனியா ருக்கு விட்ட பின்பு தூய்மைப் பணிக்காக செலவு செய்யும் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற நகராட்சிகளை காட்டிலும் திருமுருகன் பூண்டி நக ராட்சி ஒரு டன் குப்பைக்கு கொடுக்கும் தொகை மிகவும் அதிகமாக உள்ளது. மற்ற நகராட்சிகளில் ஒரு டன் குப் பைக்கு 3600 ரூபாய். ஆனால் திருமுரு கன்பூண்டி நகராட்சியில் 5.620 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் மக்களின் வரிப்பணம் பெருமளவு தூய்மைப்ப ணிக்கு சென்று விடுகின்றது. பொது நிதி யிலிருந்து புதிதாக தெருவிளக்கும் கூட அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது எனவே தூய்மைப் பணியைத் தனியாருக்கு விட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் நகராட்சியே எடுத்து நடத்த வேண்டும். மேலும் நகர்மன்ற கூட் டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள் ளது.