districts

கன்யாஸ்பின் நூற்பாலை சங்க அங்கீகாரத் தேர்தலில் சிஐடியு முதல் சங்கமாக வெற்றி

நாகர்கோவில், ஜன.13- கன்யாஸ்பின் “ கூட்டுறவு நூற்பாலை தொழிற்சங்க அங்கீகார தேர்தல் 11-1-2022 ஆம் தேதி செவ்வாயன்று  நடை பெற்றது. ஆலையில் சுமார் 350 தொழி லாளர்களுக்கு மேல் வேலை பார்த்து  வருகின்றனர். அங்கீகார தேர்தலில் பணி நிரந்தரம் பெற்ற 98 தொழிலாளர்கள் மட் டுமே வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் ஆவர். இந்த தேர்தலில் சிஐடியு, தொமுச, ஏடிபி, பிஎம்எஸ் ஆகிய சங்கங்கள் போட்டி யிட்டன. தேர்தலில் சங்கங்கள் பெற்ற வாக்கு கள் தொமுச- 27 ஏபிடி -25  சிஐடியு-29 பிஎம்எஸ்-17 ஆகும். 20 வாக்குகள் பெற்றால் அங்கீகாரம் என்ற அடிப்படையில் சிஐடியு, தொமுச, ஏடிபி ஆகிய சங்கங்கள் அங்கீகா ரம் பெற்றன.  அங்கீகாரத்தேர்தலில் சிஐடியு சங்கத் தின் சார்பில் தமிழ் மாநில பஞ்சாலை தொழி லாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம். அசோகன், மாநில செயலாளர் வி.மாணிக்க வாசகம், சிஐடியு மாவட்டத் தலைவர் பி. சிங்காரன், மாவட்டச் செயலாளர் கே. தங்க மோகனன், கன்யாஸ்பின் சங்கத்தின் செயல் தலைவர் ஜி.சந்திரபோஸ் , தலை வர் எஸ்.சக்திவேல், செயலாளர் இ. வடி வேல்குமார் உட்பட நிர்வாகிகள் முன் நின்று  செயல்பட்டனர்.  சிஐடியு சங்கம் முதல் பெரும் சங்க மாக அங்கீகாரம் பெறுவதற்காக பாடுபட்ட அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள், நம் பிக்கையுடன் வாக்களித்த தொழிலாளர்க ளுக்கு தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலா ளர் சம்மேளனத்தின் சார்பில் பொதுச்செய லாளர் எம்.அசோகன் வாழ்த்துக்களை தெரி வித்துக்கொண்டுள்ளார்.