districts

img

சிஐடியு நடைபயண பிரச்சாரம் தருமபுரி மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு

தருமபுரி, மே 22-

    உழைக்கும் வர்க்கத்தின் உரிமை  காக்க சிஐடியு நடைபயண பிரச்சாரத் திற்கு தருமபுரி மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும்.

   நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு சார்பில் நடைபெற்று வரும் நடைபயண பிரச்சாரம் கிருஷ்ணகிரி யில் துவங்கியது. தருமபுரி மாவட்ட எல்லையான ஜட்டாண்டஅள்ளிக்கு திங்களன்று வந்த நடைபயண குழு விற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. நடைபயண பிரச்சாரத்திற்கு சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

   இதில், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், நடைபயண பிரச்சார குழு தலைவரும், மாநில துணை பொதுச் செயலாளருமான கே.ஆறுமுக நயினார், சாலை போக்குவரத்து சம்மேளன மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகரா ஜன், தருமபுரி மாவட்ட செயலாளர் பி. ஜீவா, கிருஷ்ணகிரி மாவட்ட செயலா ளர் என்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற் றுள்ளனர்.  மகேந்திர மங்கலத்தில், அங்கன் வாடி ஊழியர் சங்கத்தின் மாநில செய லாளர் லில்லிபுஷ்பம், மல்லுப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தி உரை யாற்றினர். அப்போது, வெள்ளி சந்தையில் பய ணக்குழு தலைவர் கே.ஆறுமுக நயி னார் பேசுகையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம், வருடத் திற்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம், கருப்பு பணத்தை ஒழிப் போம், என்று தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது பாஜக அரசு. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. மாறாக ரூ.60 ஆக இருந்த பெட் ரோல் விலை தற்போது ரூ.100க்கு மேல் உயரந்துவிட்டது. இவர்கள் ஆட்சியில், கருப்பு பணத்தை ஒழிக்கவில்லை. கள் ளப்பணத்தை தடுக்கவில்லை. விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த முடிய வில்லை. மாறாக ஜிஎஸ்டி வரி உயர்த்தி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்துள்ளனர்.  மோடி அரசு, நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. இதை எதிர்த்து போராடினால் மக்களை  மதத்தின் பெயரால் பிரித்து திசை திருப்பு கிறது. கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சியில், மக்களுக்கான அரசாக இல் லாமல், கார்பரேட் முதலாளிகளுக்கான அரசாக செயல்பட்டுள்ளது. எனவே மக் கள் விரோத தொழிலாளர் விரோத மோடி அரசுக்கு முடிவுகட்ட வேண்டும், என்றார். கோவை கோவைக்குழுவின் இரண்டாம் நாள் (ஞாயிறன்று) பிரச்சாரம் குனிய முத்தூரில் இருந்து துவங்கியது. இந்த  நடைபயண இயக்கத்தை வாழ்த்தி, சிமெண்ட் மற்றும் பொதுத்தொழிலா ளர்கள் சங்கம், டி.பாலன் நினைவு இன் ஜினியரிங் தொழிலாளர் சங்கம் மற்றும் விச, விதொச, வாலிபர், மாதர், மாணவர் சங்கங்கள் சார்பில் பட்டாசுகள் வெடித்து எழுச்சிகரமான வரவேற்பு அளித்தனர்.  முன்னதாக, உப்பிலிபாளையம் பகு தியில் உள்ள தியாகி முத்து நினை விடத்தில் நடைபயணக்குழுவினர் அஞ் சலி செலுத்தினர். இதனையடுத்து, ஒண் டிபுதூர் சுங்கம் மைதானத்தில் நடை பெற்ற பொதுக்கூட்டத்திற்கு, இருகூர் கூட்செட் சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.

    சிபிஎம் சிங்காநல் லூர் நகர செயலாளர் தெய்வேந்திரன் வரவேற்றார். இதில் நடைபயணக்குழு தலை வரும், சிஐடியு மாநிலச் செயலாளரு மான கே.சி.கோபிக்குமார் உரையாற்று கையில், சர்வதேச பணியாளர் ஆணை யம் (ஐஎல்ஓ) சுமைப்பணி தொழிலாளர் களுக்கு 55 கிலோ எடை கொண்ட அளவு மூட்டைகளை தான் அதிகபட்சமாக தூக் குவதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இங்கு 100 கிலோ மூட்டை  வரை தூக்க சுமைப்பணி தொழிலாளர் களை நிர்பந்தம் செய்யப்படுகிறது.

     இத் தொழிலாளர்களுக்கு, தனி நல வாரியம் இல்லை. பல்வேறு நாடுகள் சோசலி சத்தை நோக்கி பயணிக்கின்றன. சோச லிசத்தை பின்பற்றுகின்ற கேரளா அரசு செய்கிற பல்வேறு நலத்திட்டங்களை பார்த்து, தாங்களும் (தமிழ்நாடு அரசு) அமலாக்க வேண்டும். மாநில அரசுகள் தங்களுடைய வரிப்பணங்களை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    கர்நாடக மக்கள் பாஜகவை தேர்தலில் மண்னை  கவ்வ செய்துள்ளனர். இதேபோல தொழிலாளர் விரோத போக்குகளை கடைபிடிக்கும் பாஜகவை 2024 தேர்தலில் மக்கள் விரட்டியடிக்கிற வேலையை செய்வார் கள் என்பதை கர்நாடக தேர்தல் முடிவு கள் தெரிவித்துள்ளது.

   அத்தோடு உழைக் கும் மக்களின் உரிமைகளை பறிக்கும் பாஜகவை விரட்டி அடிக்கிற மிகப் பெரிய கடமை இந்திய தொழிற்சங்க மையத்திற்கு உள்ளது, என்றார். நிறைவாக, சிஐடியு மாவட்ட தலை வர் கே.மனோகரன் நன்றி கூறினார். இதில், சிஐடியு மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி உட்பட திரளானோர் பங் கேற்றனர்.