திருப்பூர், ஜூன் 23 - சிஐடியு உடுமலை பொது தொழிலாளர் சங்கம் தொழிற் சங்க பயிற்சி பட்டறை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ஜல்லிபட்டியில் நடைபெற்றது. உடுமலை தலைவர் வெ.ரங்க நாதன் தலைமை உரையுடன் தி.துரையரசன் இசைப் பாடலு டன் துவங்கியது. தொழிற்சங்க வரலாறு குறித்து சிஐடியு மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். மாவட் டப் பொருளாளர் சம்பத், உடுமலை செயலாளர் எஸ்.ஜெகதீ சன் ஆகியோர் சிஐடியு அமைப்பு குறித்தும், இன்றைய செயல்பாடு குறித்தும், சங்க விரிவாக்கம் குறித்தும் உரையாற் றினார்கள். பொருளாளர் ஜோசப் நன்றி கூறினார். சிஐடியு கமிட்டி உறுப்பினர்கள், முன்னணி ஊழியர் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றறனர்.