districts

img

கோவையில் வரவேற்புக்குழு அமைப்பு

கோவை, ஆக.31- சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங் கத்தின் மாநில மாநாடு அக்டோபர் 2, 3 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை வெற்றிகரமாக்கும் வகையில், 57 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. சிஐடியு கணபதி இன்ஜினிய ரிங் சங்கத்தில் டாஸ்மாக் ஊழியர் சங் கத்தின் மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி தலை மையில் நடைபெற்றது. இதில், அக் டோபர் 2 மற்றும் 3 தேதிகளில், மசக் களிபாளையம், ஹர்சா மஹாலில் நடத்துவது என்றும், பிரதிநிதிகள் மாநாடு மற்றும் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கு என்கிற கோரிக்கையை முன்வைத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ் மாக் ஊழியர்களை பேரணி, பொதுக் கூட்டத்திற்கு திரட்டி மாநாட்டை வெற்றிகரமாக்குவது என முடிவெ டுக்கப்பட்டது.  முன்னதாக, மாநில மாநாடு முன் தயாரிப்புகள் குறித்து, சிஐடியு டாஸ்மாக் சம்மேளன பொதுச்செய லாளர் திருச்செல்வன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், சிஐ டியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலு சாமி, டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் செந்தில் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முன்னதாக, வரவேற்புக்குழு தலைவராக டாஸ்மாக் ஊழியர் சங்க  மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி, செய லாளராக ஜான்அந்தோணிராஜ், பொருளாளராக ராமகிருஷ்ணன் உள் ளிட்ட  57 கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டத்தில் பங்கேற்ற சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் பல ரும் மாநாட்டிற்கான முதற்கட்ட நிதியை வழங்கினர். வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டத்திலேயே 60 ஆயி ரம் ரூபாய் வசூலானது குறிப்பி டத்தக்கது.