districts

img

மூலப் பொருட்களின் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய சிஐடியு தையல் கலைஞர்கள் சங்க மாநாடு கோரிக்கை

உடுமலை, ஆக. 5- தையல் கலைஞர்கள் பயன்ப டுத்தும் மூலப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய மோடி அரசு  ரத்து செய்ய வேண்டும் என திங்கட்கி ழமை உடுமலை சிஐடியு அலுவலகத் தில் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் 10  ஆவது மாவட்ட மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றபட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட தையல் கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு  வேல்முருகன்  தலைமையில் நடை பெற்றது.  இதில், முதல் நிகழ்வாக இந்திய தொழிற்சங்க மையம் சிஐ டியு கொடியை  ரத்தினசாமி ஏற்றி  வைத்தார். இதைதொடர்ந்து சிஐடியு  மாவட்ட துணைச்செயலாளர் ஜெக தீசன் வரவேற்றார். சங்கத்தின்  கோவை மாவட்டச்செயலாளர்  ஆர். வேலுச்சாமி மாநாட்டை துவக்கி  வைத்து பேசினார். சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர்  சி.மூர்த்தி வேலை அறிக்கையை  முன்வைத்தார். வரவு செலவு அறிக் கையை மாவட்டப் பொருளாளர் கணேசன்  வைத்தார். அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. இதைதொடர்ந்து, தையல் கலை ஞர்கள் பயன்படுத்தும் மூலப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்ய  வேண்டும். தையல் நல வாரியத் திற்கு கட்டுமான நல வாரியத்தில்  வழங்குவதை போல் பணப் பயன் களை வழங்க வேண்டும்.தையல்  கலைஞர்களுக்கு சட்ட சமூக பாது காப்பு வழங்க வேண்டும். தையல்  கலைஞர்கள் துணிகளை பேருந் தில் எடுத்துச் செல்லும் போது சுமை  கட்டணம் வசூலிக்கும் முறைக்கு  விதிவிலக்கு வழங்க வேண்டும்.  தையல் கூட்டுறவு உறுப்பினர்க ளுக்கு வழங்க வேண்டிய 5 சதவீத  கூலியை உயர்த்தி வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். நலிவ டைந்து வரும் தையல் தொழிலுக்கு வங்கியில் கடன் உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.  பின்னர் புதிய மாவட்டக் குழு  தேர்வு  செய்யப்பட்டது. இதில் மாவட் டத்தலைவராக  எஸ்.வேல்முருகன், மாவட்டச் செயலாளராக சி.மூர்த்தி,   மாவட்டப் பொருளாளராக தண்ட பாணி, மேலும் துணைத்தலைவர் களாக லட்சுமி, சுரேஷ் மற்றும்  துணைச்செயலாளர்களாக ரத்தின சாமி, முருகசாமி ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டார்கள். முடிவில், சிஐ டியு திருப்பூர் மாவட்டச் செயலாளர்  கே.ரங்கராஜ் புதிய நிர்வாகிகளை  அறிமுகப்படுத்தி இன்றைய காலத் தில் தையல் கலைஞர்கள் சந்திக்கும்  சவால்கள் எதிர் கொள்வது குறித்து  பேசினார்.