அவிநாசி, ஜூன் 20 - தமிழ்நாடு கட்டுமான நலவாரிய கூட்டப் பரிந்துரை களை ஏற்று அரசாணை வெளியிட வலியுறுத்தி சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கட்டுமான வாரியத்தின் கூட்டப் பரிந்துரைகளை அமலாக்கிட அரசாணை வெளியிட வேண் டும். மாத ஓய்வூதியத்தை ரூ.2000 ஆக அமல்படுத்த வாரியம் பரிந்துரை செய்துள்ளதை அமல்படுத்த வேண்டும். 60 வயது நிறைவடைந்த நாள் முதல் ஓய்வூதியம் வழங்குவ துடன், கால தாமதமானால் நிலுவைத் தொகையுடன் ஓய்வூதி யம் கணக்கிட்டு வழங்க வேண்டும். நலவாரிய பலன்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மனுக்களுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒப்புதல் பெற வழிவகை செய்ய வேண்டும். சான்றிதழ்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் வழங்கலாம் என உத் தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமி ழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையி லும், சட்டமன்றத்தில் அரசாணை வெளியிடவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில், சிஐடியு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் டி.குமார், மாவட்ட செயலாளர் ராஜன், மாவட்ட நிர்வாகிகள் கணேசன், ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.