கோவை, ஜன.9- சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தின் பெயர்ப்பல கையை அகற்றிய காவல்துறையை கண்டித்து சிஐடியு வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் சிஐ டியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பெயர் பலகை உள்ளது. தனிநபர் இடத்தில் அனுமதியோடு அங்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில், எந்த அறிவிப்பு மின்றி, இரவில் யாருமற்ற நேரத்தில் திருட்டுத்தனமாக காவல் துறையினர் அகற்றி எடுத்துச்சென்றுள்ளனர். இதனை கண் டித்து ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜன் தாங்கினார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.தெய்வேந்திரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.