districts

img

சென்னை பணிமனை நடத்துநர் கொலை திருப்பூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.25- சென்னை வியாசர்பாடி பணிமனையைச் சேர்ந்த நடத்து னர் ஜெகன்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு, கொலை செய் யப்பட்டார். இதைக் கண்டித்து சிஐடியு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்கத்தினர் காங்கேயம் கிளை முன்பு வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளைத்தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பணியில் இருக்கும்போது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க, பணிப் பாதுகாப்பு  சட்டம் இயற்ற வேண்டும். சென்னை வியாசர்பாடி பணிம னையை சேர்ந்த நடத்துனர் ஜெகன்குமார் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். அவரின் குடும் பத்தில் ஒருவருக்கு உடனடியாக வாரிசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், செயலா ளர் சுரேஷ், மத்திய சங்க நிர்வாகி நடராஜன், பொதுக்குழு  உறுப்பினர்கள் சக்திவேல், தர்மலிங்கம், சந்திரசேகர் உட்பட  பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர்  ராஜசேகர் நன்றி கூறினார்.