தருமபுரி, நவ.23- நீதிமன்ற உத்தரவின்படி ஊதி யம் வழங்க வலியுறுத்தி காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்க ளுக்கு ஆதரவாக, சிஐடியுவினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழி லாளர் சங்கத்தினரின் காத்திருப்புப் போராட்டம், தருமபுரி நகராட்சி அலு வலகம் முன்பு 3 ஆவது நாளாக வியா ழனன்றும் தொடர்கிறது. போராட்டத் தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களி டம் பேச்சுவார்த்தை நடத்த முன் வராத நகராட்சி நிர்வாகம், போலீ சாரை வைத்து தொழிலாளர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். எனவே, தருமபுரி நகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மைப் பணியா ளர்களின் கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் சி.கலாவதி தலைமை வகித் தார். இதில் மாவட்டச் செயலாளர் பி. ஜீவா, தூய்மைப் பணியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் டி.வெங்கட் ராமன், பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணதா சன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஜெயராமன், லிகாய் மாவட்ட நிர்வாகி கருணாநிதி, விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அருள் குமார், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.